Monthly Archives: June 2011

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி – 625 534 தேனி மாவட்டம்.
*******************************************************************************************
+91-4546-246242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – வீரபாண்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான்.

அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தைப் பூசித்து தவம் இருந்தாள்.

அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்திச் செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, அரக்கன் இரு துண்டுகளாகப் பிளந்து இறந்தான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியைக் கன்னித்தெய்வமாக்கி கவுமாரிஎனத் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.

கவுமாரியின் கருணை:

அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,”வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்என்று கூறி மறைந்தார்.

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்-625 601, தேனி மாவட்டம்.
********************************************************************************************

+91- 4546- 234171 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன் (குழந்தை மாரியம்மன், காட்டு மாரியம்மன்)

தல விருட்சம்: – அரசமரம்

தீர்த்தம்: – கிணற்று நீர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – குளந்தை மாநகர்

ஊர்: – பெரியகுளம்

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன், தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள்.

அச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இன்னல் தீர காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர்.

அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து, ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள்.

அதன்பின், பொதுமக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கே இடம் பெயர்ந்தனர். அதன் பின் அம்மனின் அருளால் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி கவுமாரிஎன அழைக்க தொடங்கினர்.

சுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.