Monthly Archives: June 2011

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம்

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம் – 625 516. தேனி மாவட்டம்.
**************************************************************************************

+91- 99441 16258, 97893 42921.

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – கிணறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – கம்பம்

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

ஒருசமயம் இப்பகுதியில் மக்களுக்கு கொடிய நோய்கள் உண்டாகவே, மக்கள் அல்லலுற்றனர். அவ்வேளையில் பெண் ஒருத்தி கம்பத்துக்கு வந்தாள். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்ட அவள், நோயாளிகளை அழைத்து வேப்பிலையையும், மஞ்சளையும் கொடுத்தாள். அதனால் பலருக்கும் நோய் குணமாகியது. வியந்த மக்கள் அவளிடம், “எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் நீ யார்?” எனக்கேட்டனர்.

அவள் உடனே அம்பிகையாக சுயரூபம் காட்டினாள். பக்தர்களின் வேண்டுதலுக்காக இங்கேயே சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். பின்பு, சுயம்புவை சுற்றிக் கோயில் எழுப்பப்பட்டது.

பிற்காலத்தில் சுயம்பு அம்பிகைக்கு பின்புறம், மாரியம்மன் சிலை வடித்துப் பிரதிட்டை செய்து, கோயில் எழுப்பினர்.

பிரகாரத்தில் நாகர், அனுக்ஞை விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077 (சென்னை), திருவள்ளூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91-44-2680 0430, 2680 0487, 2680 1686 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – கருவேல மரம்

தீர்த்தம்: – வேலாயுத தீர்த்தம்

ஆகமம் : – காமீகம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வேலங்காடு

ஊர்: – திருவேற்காடு

மாவட்டம்: – திருவள்ளூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் நாகப் புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாகப் பாவித்து வணங்கி வந்தனர்.

ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது.ம்பிகை தானாகத் தோன்றியதால் இவளுக்கு, “கருவில் இல்லாத கருமாரி“ என்ற பெயரும் உண்டு.

முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராசகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோடம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.