Monthly Archives: June 2011

அருள்மிகு அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம்

அருள்மிகு அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் – 639 202. கரூர் மாவட்டம்.

+91- 4320 – 233 344, 233 334, 94432 – 37320.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 5முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அருங்கரை அம்மன், நல்லதாய்

தல விருட்சம்: – ஊஞ்சல்மரம்

தீர்த்தம்: – அமராவதி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெரியதிருமங்கலம்,பெரியமங்கலம்.

மாவட்டம்: – கரூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒருசமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதை திறந்தபோது, அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்ததைக் கண்டான். அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய அவன் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்தான். மீனவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.

அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா

அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில் அம்பாஜி, பனஸ்கந்தா-385 110. அகமதாபாத் மாவட்டம். குஜராத் மாநிலம்.

+91-2749-262 136,264 536,262 626, 262 930

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அம்பே மா அம்மன் (“சச்சார் சவுக்வாலி‘)

தல விருட்சம்: – அரசமரம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அம்பாஜி, பனஸ்கந்தா

மாவட்டம்: – அகமதாபாத்

மாநிலம்: – குஜராத்

மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலி மையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திர லோகத்தை வளைத்தான். பின்னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலா யத்தையும் பிடிக்க எண்ணினான். வரத்தின் பலத்தால் சிவ நாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை.

இந்த நேரத்தில், வரங்களைத் தவறாகப் பயன் படுத்துவோரை அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத்தலத்தில் தங்கிப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.