அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா

அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில் அம்பாஜி, பனஸ்கந்தா-385 110. அகமதாபாத் மாவட்டம். குஜராத் மாநிலம்.

+91-2749-262 136,264 536,262 626, 262 930

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அம்பே மா அம்மன் (“சச்சார் சவுக்வாலி‘)

தல விருட்சம்: – அரசமரம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அம்பாஜி, பனஸ்கந்தா

மாவட்டம்: – அகமதாபாத்

மாநிலம்: – குஜராத்

மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலி மையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திர லோகத்தை வளைத்தான். பின்னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலா யத்தையும் பிடிக்க எண்ணினான். வரத்தின் பலத்தால் சிவ நாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை.

இந்த நேரத்தில், வரங்களைத் தவறாகப் பயன் படுத்துவோரை அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத்தலத்தில் தங்கிப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

மற்றொரு கதையின்படி, ராம, லட்சுமணர்கள் சீதை யைத் தேடி, கானகத்தில் திரிந்த போது, சிருங்கி முனி வரைச் சந்தித்தனர். அம்பாஜி அம்பே மா தேவியை தரிசித்தால், இதற்கு வழி கிடைக்கும் என அவர் ராமனிடம் கூறினார். அம்பே மா தேவி மன மிரங்கி, “அஜய்என்ற அஸ்திரத்தைக் கொடுத்தாள். அதைக் கொண்டு ராவணனை வென்று, சீதையை மீட்டார் ராமன்.

இயந்திரமே சிலை:

இயந்திர வழிபாடு என்பது மிகவும் பழ மையானது. அம்பாஜி அம்பே மா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. “விஷயந்த் ரம்என்ற இயந்திரமே வழிபாட்டில் உள்ளது. இந்த இயந்தி ரத்தை ஒரு பளிங்குக் கல்லில் பொருத்தி நகைகளால் அலங்கரித்துள்ளனர்.

இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்கின்றனர். இதை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 51 எழுத்துக்கள் உள்ளன. இந்த இயந்திரத்தை அருகில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. பக்கத்தில் சென்று பார்க்க விரும்புவோரின் கண்களைத் துணியால் கட்டி விடுவார்கள். இதன் சக்தியைத் தாங்கும் வலிமை யாருக்கும் இல்லை என்பதால் இம் முறை பின்பற்றப்படுகிறது.

அம் பாஜி அம்பே மா சன்னதி அளவில் சிறியது தான். ஆனால், மண்டபம் பளிங்குக் கற்களால் ஆனது. பிரகாரமும் பளிங்குக் கற்களால் அழகுற அமைக்கப் பட்டுள்ளது.

தல விருட்சமாக அரசமரம் உள்ளது.

தேவியை அம்பே மாஎன்றும், “சச்சார் சவுக்வாலிஎன்றும் அழைக் கின்றனர்.கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் பளிங்கினால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டுத் தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

அம்மன் சன்னதியின் எதிரில் ஒரு பள்ளமான இடத்தில் நாகேசுவரர், அனுமான், நாகராசர் சிலை கள் உள்ளன. இதற்கு நாமே தீர்த்தம் ஊற்றி, பூத்தூவி அர்ச்சனை செய்யலாம். செம்பால் செய்யப்பட்ட பத்தடி நீளமுள்ள வித்தியாசமான உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்ற னர். இங்கு குங்குமம் மற்றும் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது.

கோயிலைச் சுற்றி 8 கி.மீ., தொலைவுக்குள் சோம் நாத் என்ற இடத்தில் சோமேஸ்வர் கோயில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் கப்பார் மவுன்டன் என்ற இடத்தில் பழைய அம்பாஜி கோயில் உள்ளது.

900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு. இங்கு அம்மனின் பாதமும், ஒரு விளக்கும் மட்டுமே இருக்கிறது. கடைகளில் பளிங்குச் சிலைகள், பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அம்பாஜி கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஏனெனில், கிருட்டிண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டதாம். நந்தகோபனும், யசோதையும் அவரை இக்கோயி லுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார் கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்ப டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

விநாயகரின் பேரன்களுக்கு சன்னதி:
வடமாநிலங்களில் விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், இவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேட அம்சம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.

நவராத்திரி.

பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், கால மெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருட்டிணனைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.

அம்மனுக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *