Monthly Archives: June 2011

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

+04181 248 224, 248 424 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.40 பகல் 1மணி, மாலை 3 இரவு 8.30 மணி வரை வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் தரிசன நேரம் மாறுபடும்.

மூலவர் ரேணுகாம்பாள்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் கமண்டலநதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் படவேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர் வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார்.

அருள்மிகு ராமலிங்க சவுடேசுவரி அம்மன் திருக்கோயில், தாசப்பக்கவுடர் புதூர்

அருள்மிகு ராமலிங்க சவுடேசுவரி அம்மன் திருக்கோயில், தாசப்பக்கவுடர் புதூர், ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராமலிங்க சவுடேசுவரி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தாசப்பக்கவுடர்புதூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆதிகாலத்தில் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளாகினார்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருளத் திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து தேவல முனிவரைத் தோற்றுவித்து,”திருமாலின் உந்தித்தாமரை நூலை வாங்கி வந்து, இவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடுஎன்று பணித்தாராம். அதன்படியே தேவல முனிவர், திருமாலைத் தரிசித்து உந்தித்தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர், அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை, அசுரர்களை வதம் செய்தாளாம். அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளிலிருந்து புதிது புதிதாக அசுரர்கள் உயிர் பெற்றனர். ஆகவே அம்பிகை, சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள். சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள், அசுரகுணம் நீங்கி மனிதர்களாக உருப்பெற்றன. அவர்களை தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டு சென்றாளாம் அம்பிகை. தேவல முனிவரும் உந்தித்தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார்.