Monthly Archives: June 2011

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி

அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
***************************************************************************

செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள முத்துப்பட்டினம் மீனாட்சிபுரத்தில் கோயில் அமைந்துள்ளது.உள்ளது முத்துமாரியம்மன் கோயில்.

1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். தனியாக வந்த அந்த சிறுமியைத் தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சந்தித்தார். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, “உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா“ என்றாள். அவரோ! சிரித்தபடியே,”என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது“ எனக் கிண்டலாகப் பதில் கூறினார்.

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாரம்மன், ஞானமூர்த்தி

அம்மன்: – முத்தாரம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – வங்கக்கடல்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வீரைவளநாடு

ஊர்: – குலசேகரன்பட்டினம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

சுயம்புவாகத் தோன்றிய அம்பாள் வடிவங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன. ‌

மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி,”எனக்குச் சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் ‌கொடுத்துனுப்புஎன்று கூற, ‌அதே போல அர்ச்சகர் கனவிலும் தோன்றி,”ஆசாரி தரும் சிலையை சுயம்பு ‌அருகே வைத்து வழிபடுஎன்று கூறி மறைந்தாள். அதன்படியே மக்களால் செய்யப்பட்டது.