Monthly Archives: June 2011

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்-614 202, தஞ்சாவூர் மாவட்டம்
*************************************************************************************************

+91 93448 14071(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மணலூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

காவிரி, கொள்ளிடம் நதிகள் ஓடும் மணலூரில், மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். மழையால் மக்களுக்கு தொல்லை உண்டாகக்கூடாது என்றெண்ணிய இப்பகுதியை ஆண்ட சிற்றரசர், மழை தரும் கடவுளான மாரியம்மனை வேண்டினார். உடன் மழை நின்று வெள்ளம் வடிந்தது. இதனால், மகிழ்ந்த சிற்றரசர் இங்கு மாரியம்மனுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் மணலூர்எனப்பட்டது.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91- 4183-242 406 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கீழ்கொடுங்கலூர்

ஊர்: – வந்தவாசி

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். கடைசிமகன் பரசுராமன். பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று. கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது முடிந்தது.

ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்றுகொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல்,”இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?” என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.