Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்

அருள்மிகு முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் அருள்மிகு ராஜகோபாலசுவாமி ஆலயம், அனந்தமங்கலம்-609 307, நாகப்பட்டினம் மாவட்டம்,

+04364 -289888 (மாற்றங்களுக்குட்பட்டது)

சீதையை மீட்க இலங்கைக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர்,” நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்கள் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு, மேலும் அரிய சக்தியைப் பெற தவம் செய்தவாறு உள்ளனர். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும். ஆகவே, அவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும்என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
*************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காளியம்மன்

அம்மன்: – துர்கை, காளியம்மன், மாரியம்மன், அஷ்டபுஜகாளி, பாலசுகாம்பாள், அபிராமி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காளியூர்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

இந்த ஊர் ஒரு காலத்தில் சீனிவாசபுரம் என அழைக்கப்பட்டது . திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் நச்சுக்காய்ச்சலாலும், வாந்திபேதியாலும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிசாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம். அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். இந்த வடகாளியம்மனுக்கு வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் என பல திருநாமங்கள் உண்டு.

காளியூர் கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு ஊரை செழிக்கச் செய்வது மட்டுமின்றி, ஊருக்கு நடுவிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை காளி. வடக்கு எல்லையில் உள்ள வடகாளியம்மன் கோயிலில் சப்தகன்னியர்கள் பரிகார தெய்வங்களாக உள்ளனர். ஐந்து காளிகளும், இரண்டு அம்பிகைகளும் அருள்பாலிக்கும் அற்புத தலம். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் சாந்தமுகமாக காட்சியளிக்கிறாள். இவளை மகாகாளி எனப் போற்றுகின்றனர்.