Category Archives: திருவாரூர்

அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி

அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி, திருவாரூர் மாவட்டம்.

+91 4366 273600 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வாசுதேவபெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கடகம்பாடி

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன். மற்றவர்களெல்லாம், இராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் இராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் நாராயணாஎன்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 4366-269 965, 94433 51528

(மாற்றங்களுக்குட்பட்டவை)

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணப்பெருமாள்

உற்சவர்

ஆதிநாராயணப்பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

வன்னி

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சமீபனம், வன்னிமரக்காடு

ஊர்

எண்கண்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம் (வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி, “முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், “மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில், தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும்கூறினார். “மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா நடத்த வேண்டும்என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன் பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான். இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப்படுகிறது.