Category Archives: திருவாரூர்

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, ருத்ரகங்கை, பூந்தோட்டம் போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 239 105 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9- 11 மணி. பிற நேரங்களில் அர்ச்சகருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் அகோர வீரபத்திர்
அம்மன் பத்ரகாளி
தீர்த்தம் அரசலாறு
ஆகமம் சிவாகமம்
புராணப் பெயர் வீராவடி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வீராவாடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர். அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள விரும்பி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, “உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான். அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. இதனால் சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மகத்தியை விரட்டியடித்தார். அவர் அகோர வீரபத்திரர்என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார்.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 -4366-278 531, 278 014, 94884 15137

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மபுரீஸ்வரர்இது ஒரு சிவத்தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்

உற்சவர்

சுப்ரமணியசுவாமி

அம்மன்

பெரியநாயகி

தலவிருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

குமாரதீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சமீவனம்

ஊர்

எண்கண்

மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலையும்தானே ஏற்றார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி, தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலைத் தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முகக் கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம்என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது. எட்டுக் கண்கள் – “எண்கண்.”