Category Archives: திருவண்ணாமலை

அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர்

அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 44 – 4211 3345, +91 4183 243 157, 94452 32457 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடேசர்

தாயார்

சுந்தரவல்லி

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

கிணற்று தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சுந்தரவரதராஜபுரம், சதுர்வேதிமங்கலம்

ஊர்

நல்லூர்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப் பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் சுந்தர வரதராஜர்என்று அழைக்கப்படுகிறார்.

பழைய கோயிலில் இருந்த மூலவர் தனிசன்னதியில் இருக்கிறார். விழாக்கள் மற்றும் பூஜையின்போது இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு மற்றும் இடதுகீழ் கையில் தண்டம் வைத்தபடி அருளுகிறார். இவரை வணங்கினால் கல்வியில் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமியின் பீடத்தில் ஆஞ்சயேர் மண்டியிட்டு வணங்கியபடியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம்

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால பார்த்தசாரதி,செம்பொன்ரங்க பெருமாள்

தாயார்

பத்மாவதி, ஆண்டாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செங்கண்

ஊர்

செங்கம்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

இராமாயண காலத்தில் இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் கொல்லப்பட்டான். இதனால் இராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார். இதன்படி இராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.

கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்கப் பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக்கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.