Category Archives: திருப்பூர்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம், திருப்பூர் மாவட்டம்
**************************************************************************************

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்துப்பாளையம் கிராமத்தில் எட்டு தலை முறைக்கு முன் கவுண்டய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள். தினமும் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுக்கு ஓட்டிச் செல்வது கவுண்டய்யனின் வேலை. காட்டில் இருந்து திரும்பும் அண்ணனுக்காக சுடச்சுடச் சோறாக்கி வைத்திருப்பது வள்ளியம்மாள். நாட்கள் பல கழிந்தன.

இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆடுமாடுகளுக்கு குடிக்கவும் தண்ணீர் கிடைக்காத நிலை. தங்கையை, உறவினர் ஒருவரது பொறுப்பில் விட்டு விட்டு, ஆடுமாடுகளைத் தானே ஓட்டிக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் கவுண்டய்யன். ஆனால், அவரைப் பிரிய மனம் இல்லாத வள்ளியம்மாள் தானும் உடன் வருவதாகக் கூறினாள். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கவுண்டய்யன். இருவரும் பொள்ளாச்சியிலேயே தங்கினர். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்க்க அருகில் இருந்த மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கே, எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளைப் பாம்பு கடித்து விட்டது. துடிதுடிக்கத் தன் கண்ணெதிரிலேயே தங்கை இறந்துபோனதைக் கண்டு, கலங்கிய கவுண்டய்யன் மயங்கிச் சரிந்தார்.

சற்று நேரத்துக்குப் பிறகு கண் விழித்தவர், இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது என்ற முடிவுடன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார். ஆனாலும் தங்கை இறந்த சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. ஊண், உறக்கமின்றித் தவித்தார். “தங்கச்சி நெனைப்புலேயே இவனும் போய்ச் சேர்ந்திடுவான் போலஎன்று ஊர்மக்கள் வருந்தினர்.

அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்

அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்– 641 666. திருப்பூர் மாவட்டம்.
*********************************************************************************************************

+91 – 421 235 0544, 235 1396 (மாற்றங்களுட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோவர்த்தனாம்பிகை

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெருமாநல்லூர்

மாவட்டம்: – திருப்பூர்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு காலத்தில் மக்கள் தெய்வ பக்தியை அறவே மறந்து வெறுக்கத்தக்க பாவச்செயல்களில் ஈடுபட்டனர். நல்லோர் அழிந்து, தீயோர் பெருகினர். இதனால், கடுங்கோபங்கொண்ட சிவபெருமான் மனிதர்களின் மீது மண்மாரியை பொழிவித்தார்.

பூமியே அழியும் நிலைக்கு வந்தது. அப்போது சிவபக்தர்கள் சிலர், மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு நற்புத்தி கொடுத்து பாவ விமோசனம் தந்து அழிவிலிருந்து காத்தருளும்படி பார்வதி தேவியிடம் வேண்டினர்.

கருணை கொண்ட அம்மன், மக்களுக்காக சிவனிடம் வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுதலுக்கு சிவன் இணங்கவில்லை. இதனால் அம்மன் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்து பெரும்பழனம் என்ற வில்வமர காட்டில், சிவனை நோக்கி மேற்கு திசையைப் பார்த்தபடி கடுந்தவம் இருந்தாள். அவளது தவத்திற்கு மதிப்பளித்த சிவபெருமான் இவ்விடத்தில் அம்பாளுக்கு காட்சி தந்தார்.

அம்பாள் அங்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயருடன் அமர்ந்தாள். சிவன் உத்தமலிங்கேசுவரர் என்ற பெயரில் லிங்க வடிவானார். பிற்காலத்தில் சோழமன்னர்கள் இங்கு கோயில் எழுப்பினர்.