Category Archives: திருப்பூர்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம்

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் மாவட்டம்.

காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.

பைரவர் என்பவர், சிவனின் அம்சம். சேத்திரங்களை இவர் காப்பதால் சேத்திரபாலகர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில் பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள். பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கம். பொன்னும், பொருளும் மன அமைதியும், மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால் கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாசித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத் தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு பைரவரின் அருளே பிரதான காரணம்.

அருள்மிகு நாட்ராயர்-நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம்

அருள்மிகு நாட்ராயர்நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம், திருப்பூர் மாவட்டம்.

 

இங்கே திருடர் திருந்துவர்; ஆடும் பேய் அலறி ஓடும்! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்மமாக வேண்டும்!’ என்று
சிவபெருமானிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், வரத்தைப் பரிசோதிக்க சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்ற கதை. அசுரனிடம் இருந்து தப்பிக்க நினைத்து பூலோகம் வந்த ஈசன், பல்வேறு இடங்களில் ஓடி ஒளிந்தார். கடைசியாக அந்த உசிலை வனத்தை அடைந்தவர், ஐவரளிச் செடி ஒன்றின் பழத்துக்குள் பதுங்கினார். இதையறிந்து இங்கு வந்த அசுரன் ஆட்டுக்குட்டியாக மாறி, ஐவரளிச் செடிகளில் இருந்த பழங்களை எல்லாம் தின்னத் துவங்கினான். விஷயம் அறிந்து பதைபதைத்த பராசக்தி, சிவபிரானைக் காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம்
வேண்டினாள்.