Category Archives: திருநெல்வேலி

சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புநாதர்
அம்மன் பிரம்பசக்தி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் தெப்பகுளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீரைவளநாடு
ஊர் உவரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது, கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது இரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீரியாக, தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று இலிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு இலிங்கோத்பவராக உள்ளார்.

சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார்

அருள்மிகு சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 209

காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொரிமுத்தைய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பாணதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரையார்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக மூலாதாரம் என்று சொல்லப்படும் அளவிற்கு கோயில் இது. பொதிகை மலை மீது அமைந்த கோயில் இது.
கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே பிற்காலத்தில் தர்மசாஸ்தாவும், சொரிமுத்தைய்யனாராக எழுந்தருளினார். இவர் இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலைத் தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவரது சன்னதியில் சப்தகன்னியர்களும் இருப்பது விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். எதிரே நந்தி, யானை, குதிரை வாகனங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருக்கிறது.