Category Archives: கேரளா

திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி

அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 93888 62321

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காலடியப்பன் (ஸ்ரீகண்ணன்)
தல விருட்சம் பவளமல்லி
தீர்த்தம் பூர்ணாநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சசலம்
ஊர் காலடி
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர். சிவனின் கருணையால் கி.பி. 788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் சிவனின் அம்சமாக அவதரித்தார். சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார். 7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர், திருமணம் செய்யாமல், தன் தாய்க்குப் பணிவிடை செய்து வந்தார். பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.

சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்டார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியைத் தானமாக வழங்கினாள். சங்கரரின் கண்கள் குளமாகின. பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சிப் பிழம்பாக உருவெடுத்தது.

இராஜராஜேஸ்வரர் திருக்கோயில், தளிப்பரம்பா

அருள்மிகு இராஜராஜேஸ்வரர் திருக்கோயில், தளிப்பரம்பா, கன்னூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இராஜராஜேஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தளிப்பரம்பா
மாவட்டம் கன்னூர்
மாநிலம் கேரளா

சிவனுக்குரிய அனைத்து பெயர்களிலும் உயர்ந்ததது இராஜராஜேஸ்வரர். கேரளாவின் 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மகரிஷி மாந்தாடா என்பவர் சிவனை குறித்து தவம் செய்து சிவனிடமிருந்து ஒரு சிவலிங்கத்தைப் பெற்றார். மயானம் இல்லாத இடத்தில் பிரதிஷ்டை செய்யும்படி சிவன் உபதேசிக்கவே, எல்லா இடங்களிலும் தேடி, கடைசியாகத் தளிபரம்பா என்ற இந்த புனித தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். மகரிஷியின் மறைவுக்கு பின் அந்த சிவலிங்கம் பூமியில் மறைந்துவிட்டது. மகரிஷியின் மகன் முசுகுந்தன் என்பவன், தன் தந்தையை போன்று சிவனை குறித்து தவம் செய்து சிவனது அருளால் மற்றொரு சிவலிங்கம் கிடைக்கப்பெற்று, அதனை வழிபட்டு வந்தான். அவனது காலத்திற்கு பிறகு, அந்த இலிங்கமும் பூமியில் மறைந்துவிட்டது. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு, சதசோமன் என்னும் அரசன் அகத்திய முனிவர் உபதேசப்படி சிவனைக்குறித்து தவம் செய்தான். அவனுடைய பக்திக்கு இரங்கி, சிவன் தந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோயிலில் சிறிய சட்டியில் நெய் ஊற்றி தருகின்றனர். பக்தர்கள் அதனை கருவறைப் படிக்கட்டில் வைத்து வழிபடுகின்றனர். சமோரிய அரசர் ஒருவர் இங்குள்ள சிவனை வழிபட்டு அப்படியே மூலவருடன் ஒன்றிவிட்டார். எனவே, அவரது வம்சாவளியினர் எவர் மரணமடைந்தாலும், முதலில் இந்த மரணச் செய்தியை இராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு அறிவிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது.