Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

மன வலிமை பெற

மன வலிமை பெற

ஒரு காரியத்தை செய்யும் பொழுது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்தவும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடாதீர்கள். “என்றும் நன்றே செய்; நன்றும் இன்றே செய்என்பதை மனதில் கொண்டு தாமதமின்றி தொடங்கி விடுங்கள். எப்போதும் விழிப்பாய் இருங்கள். நம்மை கவிழ்க்க ஒருவன் இருக்கிறான் என்பதை மனதில் கொண்டிருங்கள். எப்போதும் அறிவுப் பசியுடனே இருங்கள். நல்ல நேரத்தை தவறவிடாதீர்கள். எந்த காரியத்தையும் ஊன்றிப்பார்த்து கவனமாய்ப் படித்து ஆழ்ந்து யோசித்து, அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருங்கள். அது உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரிடமும் இன் முகத்தோடு அன்புடன் பழகுங்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களைச் சுற்றி சந்தோஷக் காற்றைப் பரப்புங்கள்.

ஓய்வு நேரத்தை என்றும் வீணாக்காதீர்கள். ஓய்வாக இருக்கும் போது நாம் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை எப்போதும் அசை போடுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம். மூளைக்கு ஓய்வு என்பது ஒன்றை பற்றியே சிந்திக்காமல் மாற்றி யோசிப்பது தான்.

துடிப்பாக வாழ்பவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வர். சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பர். பயம், ஆழ்ந்த கவலை நம் மனதையும் உடலையும் கெடுக்கிறது. மனவெழுச்சியும் தீவிர எண்ணமும் எந்த காரியத்தையும் அவசியம் வெற்றி பெறச்செய்யும்.

குடியா முழுகிடும், எழவாய் போச்சு, ஏதும் நடக்காதுபோன்று எதிர்மறையாகப் பேசுவதை தவிருங்கள். வாக்கு சுத்தத்தை மறக்காதீர்கள் எதிலும் ஒரு நேர்மையை கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் உடனே தீர்மானிக்காதீர்கள். மனதினை கேளுங்கள் அதுவே சரியானது. கோபத்தை விட்டொழியுங்கள். அடுத்தவரையும் கோபப்படுத்தாதீர்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஆசையும் ஆர்வமும் எப்போதும் வளர வேண்டும். அதுவே மனோவலிமை. மனோதிடம் நம் வாழ்வின் முதுகெலும்பு. மனோவலிமை உள்ள இடத்தில் பகுத்தறிவு பளிச்சிடும்.

தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்றும் கூச்சப்படாதீர்கள். நல்ல குணம் படைத்த நண்பர்களிடம் பழகுங்கள் உயர்ந்த சிந்தனை தரத்தக்க நூல்களைப் படியுங்கள். தன்னம்பிக்கை பெற இது அவசியம் உதவிபுரியும்.

  • வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்.
  • யானையின் பலம் தும்பிக்கையிலே;
    மனிதனின் பலம் நம்பிக்கையிலே
  • நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை; நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.
  • எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்; இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது;
    பாதையெல்லாம் மாறி வரும்; பயணம் முடிவதில்லை; மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
  • துணிந்தவர் தோற்றதில்லை; தயங்கியவர் வென்றதில்லை.
  • தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை; உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.
  • ஏமாற்றங்களைத் எரித்துவிட வேண்டும்; பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
  • புரிந்து கொண்டால் வாழ்க்கை என்பது புதிரும் அல்ல; புதினமும் அல்ல.
  • பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை; மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
  • காலுக்கு செருப்பு எப்படி வந்தது; முள்ளுக்கு நன்றி சொல்.
  • நல்லது செய்யாவிட்டாலும், தீமை செய்வதையாவது கைவிட வேண்டும்.
  • தீதும் நன்றும் பிறர் தர வாரா. – கணியன் பூங்குன்றனார்.
  • சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரம் இல்லை.
  • சோம்பேரியியின் மனம் பிசாசின் பட்டறை.
  • எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
  • எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம். என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
  • எங்க விழுந்தோம் என்று பார்ப்பதைவிட எங்கே வழுக்கினோம் என்று பார்.
  • எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
  • முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்; முயலாமை வெல்லாது.
  • தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
  • நல்ல மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினால், இப்பொழுதே நம் வேலையைச் செய்ய வேண்டும்.
  • நாளை என்பது நிச்சயம் இல்லாத போது, இன்றைய வேலையை உடனே செய்ய உத்வேகம் வரும்.
  • எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
  • இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை.
  • நீ வெளிச்சத்தில் இருந்தால் எல்லாம் உன்னைப் பின் தொடரும். ஆனால் நீ இருட்டில் நுழைந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது.
  • காலம் சில மனிதர்களை மறக்கடிக்கும்.
    ஆனால் சில மனிதர்கள் காலத்தை மறக்கடிப்பர்.
  • வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு. அதில் நீ காரணம் இல்லாமல் ஒரு காயை நகர்த்தக்கூடாது. அப்படித் தப்பான இடத்திற்கு நகர்த்தி விட்டால் பின்னர் அதை பழைய இடத்தில் வைப்பது கடினம்.
  • நீ அமைதியாக இருக்கும் போது தைரியமாக இரு. ஆனால் நீ வெற்றி பெரும் சமயத்தில் அமைதியாக இரு.
  • இறைவன் கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை; இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை. – நபிமொழி
  • உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று கடவுளிடம் சொல்லாதே; உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று உன் பிரச்சனைகளிடம் சொல்.
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.
  • தலைக்கு மேல் பறவை பறப்பதை உன்னால் தடுக்க முடியாது. ஆனால் அது உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்.
  • நண்பன் இல்லாத போது உன் கைத்தடியுடன் (மனசாட்சி) கலந்தாலோசனை செய்.
  • வாங்குகிறவனுக்கு நூறு கண்கள் தேவை. விற்பவனுக்கு ஒன்று போதும்.
  • ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்; மற்ற கையால் நம்மை அணைக்கிறான்.
  • உள்ளே நுழையும் முன்னே வெளியே வருவதைப்பற்றி சிந்தனை செய்.
  • நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள்;
    உங்கள் அன்பு நிஜமானது என்றால்
    மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.
  • என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை. – தோல்வி.
  • மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்.
  • விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு; அனைத்தையும் சாதிக்கலாம்.
  • கோடி வந்தாலும் சரி; கோடி போனாலும் சரி; மனம் கோணாமல் இருப்பது ஒரு கோடி.
  • உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது.
  • வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி; சில சமயம் இருட்டு; சில சமயம் முழு நிலவு.
  • எதிர்ப்பார்த்தவன் ஏமார்ந்து போகலாம். எதிர்ப்பாராதவனே மிகவும் பாக்கியச்சாலி.
  • உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.
  • வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்; நல்லதே நடக்கும்.
  • சிந்தித்து எதையும் செய்; செய்த பின் சிந்திக்காதே.
  • வசந்த வாழ்வைத்தேடி அலைவதை விட, வாழும் வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வதே அறிவுடைமை.
  • நிதானத்தைக் கடைப்பிடி; அதுவே வெற்றியின் முதற்படி.
  • அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன.
  • நீ காட்டின் அருகாமையில் இருந்தாலும் விறகை சிக்கனமாகவே செலவிடு.
  • வாழ்க்கை வாழ்வதற்கே. இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • என் அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது.
  • வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.
  • ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும்; அதுவரை பொறு மனமே.
  • முடிவு பண்ணி இறங்கியபின் பின்வாங்காதே. முன்னேறு.
  • கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்களைப் பார்த்து ஆண்டவன் கோபிப்பதில்லை.
  • மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமாகத்தேடிக்கொண்ட வறுமை.
  • நீ ஒரு நண்பனைப் பெற விரும்பினால், நீயே ஒரு நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல; இடையூறுகளும் துன்பங்களுமே.
  • எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ, அப்போது, இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து.
  • எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பாராத தருணங்களில், எதிர்பபார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே.
  • கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை; காற்று அடிக்காத திசை என்று எதுவுமில்லை.

இவற்றையெல்லாம் படித்தபின்னும் மன வலிமை கிட்டவில்லையெனின் கீழ்கண்ட ஆலயங்களிலுள்ள இறைவனின் காலடியில் சரணடைந்து விடுங்கள்.

வீரபத்திரசுவாமி ராயசோட்டி கடப்பா

சுவாமி நாதர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பிரசன்ன வெங்கடாஜலபதி செவ்வாய்ப்பேட்டை சேலம்
அகோர வீரபத்திரர் கும்பகோணம் தஞ்சாவூர்
நரசிம்ம பெருமாள்

வேடசந்தூர்

திண்டுக்கல்

கல்யாண வீரபத்திரர் சென்னிவாக்கம் திருவள்ளூர்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

சுப்பிரமணிய சுவாமி

புத்தூர், உசிலம்பட்டி

மதுரை
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் விராதனூர் மதுரை

மன அமைதி கிடைக்க

மன அமைதி கிடைக்க

இப்பொழுதெல்லாம் பாமரர் முதல் படித்தவன் வரை சொல்லும் வார்த்தைகள் ஸ்டிரெஸ், டென்ஷன். அகராதியின்படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அழுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

காரணங்கள்:

இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என்பது இன்றய சமூகக் கொள்கை. ஓடும் உலகத்துடன் ஓட முடியாதவர்கள் மன அழுத்தம் அடைந்து, மனதளவில் ஊனமடைகின்றனர். மன பாதிப்புகள் உடலையும் கட்டாயம் பாதிக்கும்.

மன அழுத்தம் மறைய 10 எளிய வழிகள்:

டென்ஷன் என்பது மன அழுத்தத்தை மட்டுமே குறிக்கும். ஆனால் கோபம் என்பது பிறர் உள்ளத்தையும் புண்படுத்தக் கூடியது. கோபம், கோபமடைபவர்களின் உள்ளத்தையும் உடலையும் பாதிக்கக் கூடியது. தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுப்பது தான் கோபம். நிகழ்காலத்தில் துயரத்தை ஏற்படுத்தி, பிற்காலத்தில் பகையை உண்டாக்குவது கோபம்.

டென்ஷனால் நம் மனது மட்டும் அழுத்தமும் இறுக்கமும் அடைகின்றது. ஆனால் அந்த டென்ஷனோ கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.

எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

மன அழுத்தம் உடையவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கிட இதோ சில எளிய யோசனைகள்:-

டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஒரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள் இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும். தியானம் செய்யத் தெரியாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம். அல்லது முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம். மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம் நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும். தொலைக்காட்சி பார்ப்பதை அறவே தவிற்கவும். இல்லையெனில் கார்டூன் பார்க்கவும். எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும். டென்ஷன் ஏற்படாது.

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.

ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். டென்ஷனாக இருக்கும்பொழுது அருகில் (அட்டவணையில்)உள்ள (இல்லையெனில் ஏதாவதொரு) ஆலயத்தில் அமர்ந்து இறைவழிபாடு செய்யுங்கள். மன அமைதி கிட்டும்.

அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) இராமேஸ்வரம் இராமநாதபுரம்

சுக்ரீவர்

இராமேஸ்வரம்

இராமநாதபுரம்

ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்
சங்கரனார் பார்த்திபனூர் இராமநாதபுரம்
கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஈரோடு ஈரோடு

சாரதா மாரியம்மன்

கோபிசெட்டிப்பாளையம்

ஈரோடு

ஐயப்பன் கோபி ஈரோடு
வீரபத்திரசுவாமி ராயசோட்டி கடப்பா
பதஞ்சலீஸ்வரர் கானாட்டம்புலியூர் கடலூர்
பாடலீஸ்வரர் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
நடராஜர் கோயில் நெய்வேலி கடலூர்
ஆதிமூலேஸ்வரர் பரங்கிப்பேட்டை கடலூர்
திருவரசமூர்த்தி மெய்யாத்தூர் கடலூர்
நந்தீஸ்வரர் திருநந்திக்கரை கன்னியாகுமரி
இரத்தினகிரீஸ்வரர் அய்யர் மலை கரூர்
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
வீரட்டேஸ்வரர் கீழ்படப்பை காஞ்சிபுரம்

திரிசக்தி அம்மன்

தாழம்பூர்

காஞ்சிபுரம்

முன்குடுமீஸ்வரர் பி.வி.களத்தூர் காஞ்சிபுரம்
சந்திரசூடேசுவரர் ஓசூர் கிருஷ்ணகிரி
ஆஞ்சநேயர் ஆலத்தியூர், மலப்புறம் கேரளா
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்

தத்தாத்ரேய சுவாமி

கொழுமம், குமாரலிங்கம்

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
சங்கமேஸ்வரர் கோட்டைமேடு கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

தேசிகநாதசுவாமி நகர சூரக்குடி சிவகங்கை
ஆதிபுரீஸ்வரர் திருவொற்றியூர் சென்னை
கபாலீஸ்வரர் மயிலாப்பூர் சென்னை

பாலசுப்பிரமணியர்

வடசென்னிமலை

சேலம்
ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
வில்வ வனேஸ்வரர் திருவைகாவூர் தஞ்சாவூர்
மல்லிகார்ஜூனேசுவரர் தகட்டூர் தர்மபுரி
தீர்த்தகிரீசுவரர் தீர்த்தமலை தர்மபுரி

திரவுபதி அம்மன்

ஐவர் மலை, பழநி

திண்டுக்கல்

நல்லாண்டவர்

மணப்பாறை

திருச்சி

கொடுங்கலூர் பகவதி கொடுங்கலூர் திருச்சூர்
சுயம்புலிங்க சுவாமி உவரி திருநெல்வேலி
லட்சுமிநாராயணப்

பெருமாள்

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
வேதபுரீஸ்வரர் செய்யாறு திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை திருவண்ணாமலை
இராமச்சந்திரப் பெருமாள் நெடுங்குன்றம் திருவண்ணாமலை

ராம்சுரத்குமார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

கனககிரீசுவரர் தேவிகாபுரம் திருவண்ணாமலை
உத்தமராயப்பெருமாள் பெரிய அய்யம்பாளையம் திருவண்ணாமலை
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆற்றுக்கால் திருவனந்தபுரம்
பரசுராமர் திருவல்லம் திருவனந்தபுரம்
சுப்பிரமணியசுவாமி திருத்தணி திருவள்ளூர்
ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை திருவள்ளூர்
கல்யாணசுந்தர வீரபத்திரர் மாநெல்லூர் திருவள்ளூர்
வாசுதேவ பெருமாள் கடகம்பாடி திருவாரூர்
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருச்சென்னம்பூண்டி திருவாரூர்
ஏகாம்பரேஸ்வரர் மானந்தகுடி திருவாரூர்
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் பாடகச்சேரி திருவாரூர்
கோதண்டராமர் வடுவூர் திருவாரூர்

மூங்கிலணைக் காமாட்சி

தேவதானப்பட்டி

தேனி

வீரட்டேஸ்வரர் கொருக்கை நாகப்பட்டினம்
ஆதிகும்பேஸ்வரர் செண்பகபுரம் நாகப்பட்டினம்
அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூர் நாகப்பட்டினம்
மாயூரநாதர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்
வைத்தியநாதர் வைத்தீசுவரன்கோயில் நாகப்பட்டினம்
காசி விஸ்வநாதர் ஊட்டி நீலகிரி

ஹெத்தையம்மன் நாகராஜர்

மஞ்சக்கம்பை

நீலகிரி
வேதபுரீசுவரர் புதுச்சேரி புதுச்சேரி
வீரபத்ரசுவாமி விபூதிப்புரம் பெங்களூரு
அகத்தீஸ்வரர் திருச்சுனை மதுரை
தென்திருவாலவாயர் தெற்கு மாசி வீதி, மதுரை மதுரை

சுப்பிரமணிய சுவாமி

புத்தூர், உசிலம்பட்டி

மதுரை
காசிவிஸ்வநாதர் சிவகாசி விருதுநகர்
பக்தஜனேஸ்வரர் திருநாவலூர் விழுப்புரம்
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் பஞ்சவடீ விழுப்புரம்
கிருபாபுரீஸ்வரர் வெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
நிதீஸ்வரர் அன்னம்புத்தூர் விழுப்புரம்