Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

புது வாகனங்கள் வாங்கினால் முதலில் பூஜை செய்ய

புது வாகனங்கள் வாங்கினால் முதலில் பூஜை செய்ய

முதன் முதலாக வண்டி, வாகனங்கள் வாங்கினால், முதல் பூஜை போடுவதற்கென ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயில் இருக்கும். அங்கு இறைவனை வழிபட்டால் வண்டி கோளாறுகள், விபத்துக்களின்று நல்ல முறையில் ஓடும் என்பது நம்பிக்கை.

அதுவும் கீழ்கண்ட ஆலயங்களில் பூஜை போட்டால் மிகவும் நல்லதெனக்கூறுகிறார்கள், அனுபவப்பட்டவர்கள்.

வேலாயுத சுவாமி திண்டல்மலை ஈரோடு
பூவராக சுவாமி ஸ்ரீமுஷ்ணம் கடலூர்

குமரக்கோட்ட முருகன்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

மள்ளியூர் மகா கணபதி கோட்டயம் கோட்டயம்
காரணவிநாயகர் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்
வியாக்ரபுரீஸ்வரர் பெரும்புலியூர் தஞ்சாவூர்
வண்டிக்

கருப்பணசாமி

அய்யலூர் திண்டுக்கல்

புதிதாக வீடு கட்ட

புதிதாக வீடு கட்ட

நிலம், வீடு வாங்க நன்கு உழைக்க வேண்டும். நியாயமான வழியில் பொருள் சம்பாதிக்க வேண்டும். சிக்கனமாக வாழ்ந்து சேமிக்க வேண்டும். சேமித்த பொருளுக்குள் அடங்குமாறு வில்லங்கமற்ற நிலத்தை வாங்கி, கடன் வாங்காமல் வீடு கட்டவேண்டும். அப்போதுதான் நிம்மதி கிடைக்கும். அதுவும் வாஸ்து பார்த்துக் கட்டவேண்டும். இல்லையெனில், பார்ப்பவரெல்லாம், இது சரியில்லை; அது சரியில்லை; எனக் குறை கூறுவர். உண்மையிலேயே அது குறையென்றால் தீர்த்துக் கொள்ளலாம். அவர் இப்படிச் சொல்லிவிட்டரே! இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே! என்று நாம் நம் மனதை வருத்திக்கொள்ள நேரிடலாம். இவையெல்லாம் நன்கு நடைபெற கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட நல்ல பலன் கிட்டும்.

அஷ்டபுஜப்பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பாலசுப்ரமணியன் சிறுவாபுரி சென்னை

முத்தாலம்மன்

அகரம், தாடிக்கொம்பு

திண்டுக்கல்

பூமிநாதர் திருச்சி திருச்சி
தெட்சிணாமூர்த்தி

சுவாமி

திருவொற்றியூர் திருவள்ளூர்
ஆயிரத்தெண் விநாயகர் ஆறுமுகமங்கலம் தூத்துக்குடி