Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

பதவி உயர்வு பெற

பதவி உயர்வு பெற

பதவி உயர்வு பெற நீங்கள் தகுதியில் உயர்ந்தவராக இருத்தல் வேண்டும்; உயர்ந்த பதவியை நன்கு ஆளும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். அதற்குத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களின் தகுதியை மற்றவர்களுக்கு நிரூபியுங்கள். அப்புறம் எப்பொழுதும்போல பின்கதவு வழியாகவும் முயலுங்கள். அதுதான்….காக்காய்பிடித்து வேண்டிய பதவி உயர்வு பெறலாம்; மேலதிகாரியின் மனைவியிடம் காணிக்கை கொடுத்தும் பதவி உயர்வு பெறலாம்; தொழிற்சங்கத் தலவர்களைக் காக்காய்பிடித்தும், காணிக்கை கொடுத்தும் பதவி உயர்வு பெறலாம். இல்லையெனில், கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் பதவி உயர்வு பெறலாம்.

பிரகதீஸ்வரர் கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர்
பள்ளி கொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளி ஆந்திரா
கோதண்டராமர் இராமேஸ்வரம் இராமநாதபுரம்
இலட்சுமி நாராயணர் புதூர் ஈரோடு
பதஞ்சலீஸ்வரர் கானாட்டம்புலியூர் கடலூர்
தேவநாத பெருமாள் திருவகிந்திபுரம் கடலூர்

முத்துக்குமரர்

பரங்கிப்பேட்டை

கடலூர்
ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம் காஞ்சிபுரம்
கச்சி அனேக தங்காவதேஸ்வரர் அனேகதங்காவதம், காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
வியாக்ரபுரீஸ்வரர் திருப்புலிவனம் காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன்

மாங்காடு

காஞ்சிபுரம்

பிரசன்ன வெங்கட்ரமணர் காருவள்ளி சேலம்
காளஹஸ்தீஸ்வரர் கதிராமங்கலம் தஞ்சாவூர்
பாலுகந்தநாதர் திருவாய்பாடி தஞ்சாவூர்

மாரியம்மன்

புன்னைநல்லூர்

தஞ்சாவூர்

சுப்பிரமணியசுவாமி திருமலைக்கேணி திண்டுக்கல்
கோத பரமேஸ்வரர் குன்னத்தூர் திருநெல்வேலி
புருஷோத்தமப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
பாலசுப்பிரமணியசுவாமி ஆண்டார்குப்பம் திருவள்ளூர்
தியாகராஜர் திருவாரூர் திருவாரூர்
நீலகண்டேஸ்வரர் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
திரிவிக்கிரமன் சீர்காழி நாகப்பட்டினம்
மாணிக்கவண்ணர் திருவாளப்புத்தூர் நாகப்பட்டினம்
அரசலீஸ்வரர் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்
திருவிக்கிரமசுவாமி திருக்கோவிலூர் விழுப்புரம்
இலட்சுமி நரசிம்ம சுவாமி பரிக்கல் விழுப்புரம்

பணி இடமாற்றம்

பணி இடமாற்றம்

பணி இடமாற்றம் பெற பணியில் இருக்கும்போது மேலதிகாரியின் சினத்துக்கு ஆளாகாமல் பணிகளை ஆற்றியிருந்தால், அவரைக் காக்காய்பிடித்து வேண்டிய இடத்துக்குப் பணி இடமாற்றம் பெறலாம்; மேலதிகாரியின் மனைவியிடம் காணிக்கை கொடுத்தும் வேண்டிய இடத்துக்குப் பணி இடமாற்றம் பெறலாம்; தொழிற்சங்கத் தலவர்களைக் காக்காய்பிடித்தும், காணிக்கை கொடுத்தும் வேண்டிய இடத்துக்குப் பணி இடமாற்றம் பெறலாம். இல்லையெனில் தஞ்சாவூர், திருவாய்பாடியில் உள்ள அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயிலில் உள்ள பாலுகந்தநாதரிடம் முறையிடுங்கள். வேண்டிய இடத்துக்குப் பணி இடமாற்றம் பெறலாம்.