Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

நல்ல கணவன் கிடைக்க

நல்ல கணவன் கிடைக்க

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

மனவியிடம் அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். கோபப்பட்டு மனது புண்படும்படி பேசக் கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் கோபிக்கக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்கக் கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். முக்கியமானவற்றை மனைவியிடம் கூறி கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்(நியாயம் இருந்தால்). வித்தியாசமாக சமையல் ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். ஒளிவு மறைவு கூடாது. மனைவியை (நம்பவேண்டிய இடத்தில்) நம்ப வேண்டும். மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. முக்கியமாக மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. கைச் செலவுக்குப் பணம் தர வேண்டும். தன் மனைவியின் வளர்ச்சியில் பெருமை கொள்வதும், அவள் தன்னை விட திறமைசாலியாக இருந்தால் அதை ஒப்புக் கொள்ளத் தயங்காதவனாகவும் இருத்தல் வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளை அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்து கொடுத்து மனைவியை உடலாலோ மனதாலோ தொல்லை செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இத்தனையும் ஒருசேர உள்ள ஒரு கணவன் கிட்டுவானா? மிகவும் அரிது.

குடும்பம் ஒன்றுபட்டு, கணவனும் மனைவியும் ஒன்றாக வாழத் தேவை அன்பே. குடும்ப அமைப்பு என்பது மனைவியையோ, கணவனையோ கட்டுப் படுத்தவோ அடிமைப்படுத்தவோ உருவாக்கப்படவில்லை.

உன்னுடைய கணவன் இராமனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. ஏனெனில்,
ராமனும் கூட ஒரு கட்டத்தில் தன் மனைவியை சந்தேகப்பட்டவன்தான். நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படு.”

மனைவியை அதிகம் நேசித்தாலும் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்தான் நல்ல கணவன்இது ஒரு சாரார் கருத்து.

சோதிடர்கள்கூறுவது: சுப கேந்திர திரிகோண ராசிகளில் லக்கினத்தில் சுபர்கள் அமையின் பண்புள்ள நல்ல கணவன் அமைவான். அங்கே பாவிகள் அமையினும், 6-8-12ல் சுபகிரகம் அமையினும் பண்பற்ற கெட்ட கணவன் அமைவான்.

தனக்குப் பொருத்தமான துணை வேண்டும் என்று தேடிக்கொண்டே போனால், உலகம் முழுதும் தேடினால் கூட கூட நீங்கள் தேடும் பொருத்தமானவர்கிடைக்கமாட்டார்.

உங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ற கணவனைத் தேடுங்கள். மேலே சொல்லபட்டிருக்கும் தகுதிகளில் ஒரு பத்துக்கு ஆறு தேறினாலும் பரவாயில்லை. மீதியை நீங்கள் அவர் மனைவியானபின் கற்றுக்கொடுங்கள். உங்களைத் தன் அன்பு மனைவியாக நேசிக்கும், எத்தருணத்திலும் கைவிடாத ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுங்கள். கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்துவர நல்ல கணவன் அமைவான்.

ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா(வல்) திருச்சி

தீப்பாச்சியம்மன்

வண்ணாரப்பேட்டைதிருநெல்வேலி

திருநெல்வேலி

நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க

நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க

சாதாரண மனித வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த உடல் இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக நரம்புத்தளர்ச்சி (ஹிஸ்டீரியா) நோயாளிகளிடம் காண முடியும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாகத் தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.

இளம் வயது போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.

கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.

திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.

நோயின் அறிகுறிகள்

  • 1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)
  • 2. வலிப்புகள் (Convulsion)
  • 3. நினைவு மாற்றங்கள் (Dissociative changes)
  • 4. இரட்டை வாழ்க்கை (Dual personality)
  • 5. பன்முக வாழ்க்கை (Multiple personality)
  • நன்றி விக்கிபீடியா

இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

வசம்பை தூளாக்கி சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடிக்கலாம். சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

அத்துடன் சேலத்தில் உள்ள அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுவர நோயின் தாக்கம் சிறிது சிறிதாகக் குறைகிறது என்கின்றனர் சேலம்வாசிகள்.