Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

தோஷங்கள் நீங்க

தோஷங்கள் நீங்க

செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகத் தோஷங்கள்; இன்னும் எத்தனையோ தோஷங்கள்.

பிரம்ம ஹத்தி தோஷம் என்பது சாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படும். கொலை செய்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புணர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும். பின்னர் வந்தவர்கள், “குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்என்று சேர்த்துக்கொண்டனர். அறியாமையில் திளைக்கு மனிதர்களிடமிருந்து பணம் பறிக்க தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தோஷங்களைப் படைத்துக்கொண்டனர் ஒரு சாரார்.
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே இன்னல் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வழிவிடும் முருகன்

இராமநாதபுரம்

ராமநாதபுரம்

நட்டாற்றீஸ்வரர் காங்கயம்பாளையம் ஈரோடு
பூவராக சுவாமி ஸ்ரீமுஷ்ணம் கடலூர்
திருவனந்தீஸ்வரர் காட்டுமன்னார் கோயில் கடலூர்
நரசிம்மர் சிங்கிரிகுடி கடலூர்

பாலசுப்பிரமணியர்

வெண்ணெய் மலை

கரூர்
ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம் காஞ்சிபுரம்
தெய்வநாயகேஸ்வரர் எலுமியன்கோட்டூர் காஞ்சிபுரம்
சத்யநாதசுவாமி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கச்சூர் காஞ்சிபுரம்
பாண்டவதூதப் பெருமாள் திருப்பாடகம் காஞ்சிபுரம்
பிரசன்ன வெங்கடேசர் திருமலைவையாவூர் காஞ்சிபுரம்
நித்ய கல்யாணபெருமாள் திருவிடந்தை காஞ்சிபுரம்
நிலாத்துண்டப்பெருமாள் நிலாதிங்கள் காஞ்சிபுரம்

சுப்பிரமணியசுவாமி

வல்லக்கோட்டை

காஞ்சிபுரம்

திருஊரகப்பெருமாள் குன்றத்தூர் காஞ்சிபுரம்
பாடலாத்ரி நரசிம்மர் சிங்கப்பெருமாள்கோயில் காஞ்சிபுரம்

சித்தர்

தாம்பரம்

காஞ்சிபுரம்

சித்தி விநாயகர் பாகலூர் கிருஷ்ணகிரி
அவிநாசியப்பர் அவிநாசி கோயம்புத்தூர்
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்
கல்யாணவரதராஜர் கொழுமம் கோயம்புத்தூர்
ஆதீஸ்வரர் பெரியகளந்தை கோயம்புத்தூர்
முருகன்

வேல்கோட்டம்

கோயம்புத்தூர்

ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி

இடுகம்பாளையம்

கோயம்புத்தூர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) தேவகோட்டை சிவகங்கை
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) கீழப்பூங்குடி சிவகங்கை

சேவுகப் பெருமாள்

சிங்கம்புணரி

சிவகங்கை

கந்தசுவாமி கந்தகோட்டம் சென்னை
குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) கோயம்பேடு சென்னை
ஆதிபுரீஸ்வரர் திருவொற்றியூர் சென்னை
பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் மேற்கு சைதாப்பேட்டை சென்னை
வைகுண்டவாசப்பெருமாள் கோயம்பேடு சென்னை
பிரசன்ன வெங்கடாஜலபதி செவ்வாய்ப்பேட்டை சேலம்
ஆபத்சகாயேஸ்வரர் ஆடுதுறை தஞ்சாவூர்
ஆகாசபுரீஸ்வரர் கடுவெளி தஞ்சாவூர்
ஹரசாப விமோசன பெருமாள் கண்டியூர் தஞ்சாவூர்
கோடீஸ்வரர், கைலாசநாதர் கொட்டையூர் தஞ்சாவூர்
சத்தியகிரீஸ்வரர் சேங்கனூர் தஞ்சாவூர்

கோடியம்மன்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

சிவக்கொழுந்தீசர் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி தஞ்சாவூர்
யோகநந்தீஸ்வரர் திருவிசநல்லூர் தஞ்சாவூர்
வஜ்ரகண்டேஸ்வரர் வீரமாங்குடி தஞ்சாவூர்
அபயவரதீஸ்வரர் அதிராம்பட்டினம் தஞ்சாவூர்
திருவானேஷ்வர் அரங்கநாதபுரம் தஞ்சாவூர்
பிரம்மஞான புரீஸ்வரர் கீழக்கொருக்கை தஞ்சாவூர்
வரதராஜப்பெருமாள் பசுபதி கோயில் தஞ்சாவூர்
அட்சயபுரீஸ்வரர் விளங்குளம் தஞ்சாவூர்
சோலிங்கசுவாமி சோமலிங்கபுரம், கன்னிவாடி திண்டுக்கல்
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திண்டுக்கல் திண்டுக்கல்

இடும்பன்

பழநி

திண்டுக்கல்
தண்டாயுதபாணி பழனி திண்டுக்கல்
கதிர் நரசிங்க பெருமாள்

வி.மேட்டுப்பட்டி

திண்டுக்கல்

மகாலிங்கேஸ்வரர் விராலிப்பட்டி திண்டுக்கல்

அஞ்சலி வரத ஆஞ்சநேயர்

சின்னாளபட்டி

திண்டுக்கல்

உத்தமர் உத்தமர் கோவில் திருச்சி
பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சி
தசாவதாரக் கோயில் ஸ்ரீரங்கம் திருச்சி
மாங்கல்யேஸ்வரர் இடையாற்று மங்கலம் திருச்சி
கைலாச நாதர் காருகுடி திருச்சி
திருக்காமேஸ்வரர் வெள்ளூர் திருச்சி

பாலசுப்பிரமணியர்

ஆய்க்குடி

திருநெல்வேலி
மதுநாதசுவாமி இலத்தூர் திருநெல்வேலி
கோத பரமேஸ்வரர் குன்னத்தூர் திருநெல்வேலி
நெல்லையப்பர் திருநெல்வேலி திருநெல்வேலி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

திருநெல்வேலி
சதாசிவ மூர்த்தி புளியறை திருநெல்வேலி

நீலமணிநாத சுவாமி

கடையநல்லூர்

திருநெல்வேலி

வரதராஜப்பெருமாள் சங்காணி திருநெல்வேலி
இராஜகோபால சுவாமி மன்னார்கோயில் திருநெல்வேலி

கங்கையம்மன்

சந்தவாசல்

திருவண்ணாமலை

பச்சையம்மன்

வாழைப்பந்தல்

திருவண்ணாமலை

தீர்க்காஜலேஸ்வரர் நெடுங்குணம் திருவண்ணாமலை
உத்தமராயப்பெருமாள் பெரியஅய்யம்பாளையம் திருவண்ணாமலை
வாசீஸ்வரர் திருப்பாசூர் திருவள்ளூர்
படம்பக்கநாதர் திருவொற்றியூர் திருவள்ளூர்
விண்ணவராய பெருமாள் பழைய அம்பத்தூர் திருவள்ளூர்
சிங்கீஸ்வரர் மப்பேடு திருவள்ளூர்
முக்தீஸ்வரர் சிதலப்பதி திருவாரூர்
கிருபாசமுத்திரப்பெருமாள் திருச்சிறுபுலியூர் திருவாரூர்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர் திருவாரூர்
தேவபுரீஸ்வரர் தேவூர் திருவாரூர்
ஆதிநாராயணப்பெருமாள் எண்கண் திருவாரூர்
பூவனாதர் (செண்பகவல்லி) கோவில்பட்டி தூத்துக்குடி
கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கம்பம் தேனி
முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி மற்றும் இராஜகோபாலசுவாமி ஆலயம் அனந்தமங்கலம் நாகப்பட்டினம்
வீரட்டேஸ்வரர் கீழப்பரசலூர் நாகப்பட்டினம்
கேடிலியப்பர் கீழ்வேளூர் நாகப்பட்டினம்
ஆதிகும்பேஸ்வரர் செண்பகபுரம் நாகப்பட்டினம்
நாண்மதியப்பெருமாள் தலச்சங்காடு நாகப்பட்டினம்
மகாலட்சுமீஸ்வரர் திருநின்றியூர் நாகப்பட்டினம்
வரதராஜப்பெருமாள் திருமணிக்கூடம் நாகப்பட்டினம்
சவுந்தரராஜப்பெருமாள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வீரபத்திரசுவாமி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காத்ர சுந்தரேஸ்வரர் கஞ்சாநகரம் நாகப்பட்டினம்
கிருபாகூபாரேச்வரர் கோமல் நாகப்பட்டினம்
நாகேஸ்வரர் பெரியமணலி நாமக்கல்
கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோவ()ர்ணம் புதுக்கோட்டை
சுகந்த பரிமளேஸ்வரர் திருமணஞ்சேரி புதுக்கோட்டை
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) திருவரங்குளம் புதுக்கோட்டை
கைலாசநாதர் (பிரசன்னநாயகி) நெடுங்குடி புதுக்கோட்டை
நாகநாதர் பேரையூர் புதுக்கோட்டை
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை
நாமபுரீஸ்வரர் ஆலங்குடி புதுக்கோட்டை
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர் புதுக்கோட்டை
திருக்காமீஸ்வரர் (கோகிலாம்பிகை) வில்லியனூர் புதுச்சேரி
சுந்தரமகாலிங்க சுவாமி சதுரகிரி மதுரை
நவநீத கிருஷ்ணர் (பிரசன்னவெங்கடேசர்) தெற்குமாசி வீதி மதுரை
மதனகோபாலசுவாமி மதுரை மதுரை
இம்மையிலும் நன்மை தருவார் மேலமாசி வீதி மதுரை மதுரை
சித்திர ரத வல்லபபெருமாள் குருவித்துறை மதுரை
சித்திர ரத வல்லபபெருமாள் குருவித்துறை மதுரை
மாயூரநாதர் சுவாமி பெத்தவநல்லூர், இராஜபாளையம் விருதுநகர்
நம்பெருமாள் சோலைக்கவுண்டன்பட்டி விருதுநகர்
அதுல்யநாதேஸ்வரர் அறகண்டநல்லூர் விழுப்புரம்
லட்சுமி நரசிங்க பெருமாள் திண்டிவனம் விழுப்புரம்
பாலமுருகன் இரத்தினகிரி வேலூர்
செல்வ விநாயகர் சேண்பாக்கம் வேலூர்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருப்பாற்கடல் வேலூர்

தொழு நோய் நீங்க

தொழு நோய் நீங்க

தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார்.
சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய் நோயாளி தும்மும் போதும், இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது.
தொழுநோயா எனச் சந்தேகிக்க உதவும் சில அறிகுறிகள்.
உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல். அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்.
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.
தோல் தடித்தும், எண்ணெய் பூசியது போன்ற தோற்றம்.

உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்.
காது மடல் தடித்திருத்தல். கண் புருவமுடி உதிர்தல். கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.
சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)
பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல், பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்.
உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல்.
கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல், குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்.
கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்.
முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல். மணிக்கட்டு தொங்கி விடுதல்.
கணுக்கால் செயலிழந்து போதல்.
ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்.
சட்டையில் பொத்தான் போட முடியாமை, பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.
தொழுநோய் என உறுதி செய்ய

கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.

1. உணர்ச்சியற்ற தேமல்
2.
நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
3.
தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க
தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வலி உணர்ச்சியை குண்டூசி, பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.
பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு, வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.
தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.

நன்றி :- தமிழக அரசு

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை, மாலை இரண்டு வேளை உட்கொள்ள நாள்பட்ட தொழு நோய் தீரும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

வல்லாரை இலை இந்நோய்க்கு மருந்து என்கின்றனர் சிலர்.

தொழு நோயை குணமாக்கும் மருந்துகளில் அதிக அளவில் துளசி சேர்க்கப்படுகிறதாம்.

டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளாராம்.

நாட்பட்ட நோய்க்கு இதெல்லாம் சரிப்படாது. என்னதான் அலைக்கழிக்கப்பட்டாலும் அரசு மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெறுங்கள்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். நோய் குணமடைந்தால் சரிதானே.

சோமநாத சுவாமி (ஆனந்தவல்லி) மானாமதுரை சிவகங்கை
சற்குணலிங்கேஸ்வரர் கருக்குடி

(மருதாநல்லூர்)

தஞ்சாவூர்
குருவாயூரப்பன் குருவாயூர் திருச்சூர்
ஜகதீஸ்வரர் ஓகைப்பேரையூர் திருவாரூர்
நீள்நெறிநாதர் தண்டலச்சேரி திருவாரூர்
நர்த்தனபுரீஸ்வரர் திருத்தலையாலங்காடு திருவாரூர்
நெல்லிவனநாதர் திருநெல்லிக்கா(வல்) திருவாரூர்
உமாமகேஸ்வரர் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்

மெய்கண்டமூர்த்தி

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

பழனியாண்டவர்

பேளுக்குறிச்சி

நாமக்கல்
திருமூலநாத சுவாமி (அகிலாண்டேஸ்வரி) சோழவந்தான் மதுரை