Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

விவசாயம் செழிக்க

விவசாயம் செழிக்க

பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கு விவசாயம் சரிவர நடக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நி‌லையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த லலிதாதாட்டி,7 என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போனார். இவரை விவசாயம் செழிக்கவேண்டிப் பலிகொடுத்துள்ளனர். என்ன கொடுமை! அறியாமை!

உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. பூமி சூடாகுதல், பருவகால மாற்றம், பனி மலை உருகுதல், கடல்மட்டம் உயர்தல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவை இயற்கையாக ஏற்படும் பேரிடர்கள் இல்லை. மனிதனின் தவறான நடவடிக்கைகளாலேயே இவை ஏற்படுகின்றன. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், மலைகளை குடைதல் போன்ற, மனிதர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே இது போன்ற நிலை ஏற்படுகிறது. நன்செய் நிலங்கள் தற்போது குறைந்துள்ளது. விளை நிலங்களை விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம். தடை செய்யப்பட்ட விதை, ரசாயன உரம் இவற்றைவிட, இயற்கைச் சூழலை ஆழ்ந்து புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் விவசாயம் செய்ய வேண்டும்.”

நம்மாழ்வார்

விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.

மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பசுமைப் புரட்சிஎன்ற பெயரில் நவீன இரசாயன முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களைத் தயாரித்துப் பயன்படுத்த முன் வரவேண்டும். இயற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.

வேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.

பூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.

மேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. மேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டுகள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.

பயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ

பயிர்களுக்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் பூச்சி விரட்டி கசாயம்பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட; பக்க விளைவு இல்லாதது.

பூச்சி விரட்டி செய்முறையை வேளாண் அலுவலகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதன் பயன்கள் :-

இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை. பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.

பயிருக்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது). மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கின்றது. இரசாயனப் பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடப் பலன் கூடுமென்பது நம்பிக்கை.

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கல்லங்குறிச்சி அரியலூர்

கொண்டத்து காளியம்மன்

பாரியூர்

ஈரோடு

சிவக்கொழுந்தீஸ்வரர் தீர்த்தனகிரி கடலூர்
அருங்கரையம்மன் சின்னதாராபுரம் கரூர்

பாலசுப்ரமணிய சுவாமி

வேலாயுதம்பாளையம்

கரூர்

கொண்டத்துக் காளியம்மன்

பெருமாநல்லூர்

கோயம்புத்தூர்

காரணவிநாயகர் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்

கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி

சிவகங்கை

முத்துமாரியம்மன்

தாயமங்கலம்

சிவகங்கை

சேவுகப் பெருமாள்

சிங்கம்புணரி

சிவகங்கை

பால சுப்பிரமணியர்

சீலநாயக்கன்பட்டி

சேலம்

ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா(வல்) திருச்சி
மிளகு பிள்ளையார் சேரன்மகாதேவி திருநெல்வேலி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

திருநெல்வேலி
சொரிமுத்து அய்யனார் காரையார் திருநெல்வேலி
நீள்நெறிநாதர் தண்டலச்சேரி திருவாரூர்
இரத்தினபுரீஸ்வரர் திருநாட்டியத்தான்குடி திருவாரூர்

கற்குவேல் அய்யனார்

காயாமொழி

தூத்துக்குடி

காளியம்மன்

ஆண்டிப்பட்டி

தேனி

கவுமாரியம்மன்

பெரியகுளம்

தேனி

இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் தேனி
திருப்பயற்றுநாதர் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
சண்முக நாதர் விராலிமலை புதுக்கோட்டை
மொட்டை விநாயகர் கீழமாசி வீதி மதுரை
ஜெனகை நாராயணப் பெருமாள் சோழவந்தான் மதுரை
சொர்ணபுரீஸ்வரர் தென்பொன்பரப்பி விழுப்புரம்
நிதீஸ்வரர் அன்னம்புத்தூர் விழுப்புரம்
சலநாதீஸ்வரர் தக்கோலம் வேலூர்

வியாபாரம் விருத்தி அடைய

வியாபாரம் விருத்தி அடைய

இன்று செய்யும் தொழிலில் எந்த வகையில் செலவுகளை குறைக்க முடியும்; விற்பனையை கூட்ட இன்னும் என்ன வழி உள்ளது என்று எண்ணிப்பார். தொழில் சார்ந்த சிந்தனையிலேயே இரு. சரியான முடிவுக்கு வந்தவுடன் அதை உடனே செயல்படுத்து. கூடவே உனது தொழில் நண்பர்களை நன்கு கவனித்துவா. அவர்கள் வளர்ச்சி பெறுவது எதனால் என்பதைக் கண்டு பிடி. வெற்றி நிச்சயம். அப்போது உனக்கு இன்னும் பல வகையில் யோசனைகள் தோன்றும். வழி தான்னாலே பிறக்கும்.

இன்றைய விளம்பர உலகில் காய்கறிக் கடைக்குக் கூட இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்துவங்கி உள்ளனர். ஆகவே உனது தொழிலைப் பற்றி உன்னால் முடிந்த அளவு விளம்பரம் செய். சமீபத்தில் ஒரு பெண் தொழிலதிபர் கூறுகிறார். “வண்டிக்கு பெட்ரோல் போன்றது விளம்பரம். பெட்ரோல் இல்லா விட்டால் எப்படி வண்டி பாதியில் நின்று போகுமோ அதுபோல, எனது பொருள் எவ்வளவு தான் மார்க்கெட்டில் விற்பனையானாலும் விளம்பரத்தை நிறுத்திவிட்டால் விற்பனை சிறுத்து, தொழில் நின்று விடும்என்றாராம். உன்னால் முடிந்த அளவு உனக்கு தெரிந்த வழிகளில் விளம்பரம் செய்.

உங்கள் அணுகுமுறையில் கோளாறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விற்கும் பொருள் குத்துவிளக்காக இருந்தால் விரைவில் உடையாது; அதுவே அரிசியாக இருந்தால் தீர்ந்தவுடன் வாங்கியாகவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில் ஆரம்பிக்குமுன் தொழிலைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நுணுக்கங்களை விரைவில் தெரிந்து கொள்ளவேண்டும். மின் விளக்குகள் வந்துவிட்ட இக்காலத்தில் மண்ணெண்ணய் விளக்கு விற்றால் எப்படி வியாபாரம் பெருகும். காலத்திற்கு ஏற்ற பொருளை விற்கவேண்டும்.

இன்று எல்லாத் துறைகளுமே போட்டியில்தான் நடைபெறுகிறது. போட்டியில்லாவிட்டால் பொறுப்பு இருக்காது. போட்டி இல்லாவிட்டால் பொருளில் தரம் இருக்காது. அதைவிட போட்டி இல்லாவிட்டால் தொழில் வளர்ச்சி இருக்காது.

போட்டிநிலை கண்டு கலங்காமல், உனது தொழிலையும் மாற்றிக்கொள்ளாமல் இன்று செய்யும் தொழிலைச் சார்ந்த இன்னொன்றை ஆரம்பித்துக்கொள். அதனால் உனக்கு இன்னும் பயன் கூடும். பாதுகாப்பாகவும் இருக்கும்.

நோக்கு(பார்வை) எப்படியிருக்கிறதோ அதற்குத் தக்கபடி எண்ணங்கள் மாறும். வியாபாரத்தில் வித்தியாசமான கோணத்தில் உத்திகளைக் கையாண்டு பாருங்கள்.

பில்லி, சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து கைப்பொருளை இழக்காதீர்கள்.

அத்துடன் இயன்றால் கீழ்கண்ட ஆலயங்கள் சென்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

அட்டாள சொக்கநாதர் மேலப்பெருங்கரை இராமநாதபுரம்
சந்திரசேகரர் அத்தாணி ஈரோடு
பத்திரகாளி அம்மன் அந்தியூர் ஈரோடு
திருக்காலடியப்பன் காலடி எர்ணாகுளம்
கள்வப்பெருமாள் திருக்கள்வனூர் காஞ்சிபுரம்

சக்குளத்துகாவு பகவதி

சக்குளத்துக்காவு

கோட்டயம்

கோனியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இரத்தினகிரி முருகன்

சரவணம்பட்டி

கோயம்புத்தூர்

வேலாயுதர்

செஞ்சேரி

கோயம்புத்தூர்

விநாயகர் ஈச்சனாரி கோயம்புத்தூர்
வெங்கடேசப்பெருமாள் மொண்டிபாளைம் கோயம்புத்தூர்
ஆட்கொண்டநாதர் இரணியூர் சிவகங்கை
பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை
வடபழநி ஆண்டவர் வடபழநி சென்னை
கைலாசநாதர் தாரமங்கலம் சேலம்

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

ஆபத்சகாயேஸ்வரர் ஆடுதுறை தஞ்சாவூர்
வில்வ வனேஸ்வரர் திருவைகாவூர் தஞ்சாவூர்
பிரம்மன் கும்பகோணம் தஞ்சாவூர்
சௌந்தர்ராஜப் பெருமாள் தாடிக்கொம்பு

திண்டுக்கல்

பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சி

மாரியம்மன்

சமயபுரம்

திருச்சி

பிரம்மபுரீஸ்வரர் திருப்பட்டூர் திருச்சி
உச்சிப்பிள்ளையார் மலைக்கோட்டை திருச்சி
அம்மநாதர் சேரன்மகாதேவி திருநெல்வேலி
மிளகு பிள்ளையார் சேரன்மகாதேவி திருநெல்வேலி
கைலாசநாத சுவாமி பிரம்மதேசம் திருநெல்வேலி
வெங்கடாசலபதி (தென்திருப்பதி) மேலத்திருவேங்கட

நாதபுரம்

திருநெல்வேலி
புருஷோத்தமப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

வெங்கடாஜலபதி

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி

இராஜகோபால சுவாமி மன்னார்கோயில் திருநெல்வேலி
இராமச்சந்திரப் பெருமாள் நெடுங்குன்றம் திருவண்ணாமலை
மல்லிகார்ஜுனசுவாமி பர்வதமலை, கடலாடி திருவண்ணாமலை
கனககிரீசுவரர் தேவிகாபுரம் திருவண்ணாமலை

கற்குவேல் அய்யனார்

காயாமொழி

தூத்துக்குடி

முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி

திருமலைராயப்பெருமாள் கோம்பை தேனி
சனீஸ்வர பகவான் குச்சனூர் தேனி
கூடல் அழகிய பெருமாள் கூடலூர் தேனி
வீரட்டேஸ்வரர் கொருக்கை நாகப்பட்டினம்
வீரட்டேஸ்வரர் வழுவூர் நாகப்பட்டினம்
திருமறைக்காடர் வேதாரண்யம் நாகப்பட்டினம்
கல்யாணராமர் மீமிசல் புதுக்கோட்டை

பிரத்யங்கிராதேவி

மொரட்டாண்டி

புதுச்சேரி

தண்டாயுதபாணி செட்டிகுளம் பெரம்பலூர்
கள்ளழகர் அழகர்கோவில் மதுரை
யோக நரசிம்மர் ஒத்தக்கடை, மதுரை மதுரை
மீனாட்சி சொக்கநாதர் கோச்சடை மதுரை

ஜெனகை மாரியம்மன்

சோழவந்தான்

மதுரை

திருமறைநாதர் திருவாதவூர் மதுரை

முத்துநாயகி அம்மன்

பரவை

மதுரை

வீரராகவப்பெருமாள் மதுரை மதுரை
வேணுகோபால சுவாமி குராயூர் கள்ளிக்குடி மதுரை
வடபத்ரசாயி(ஆண்டாள்) ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர்
காசிவிஸ்வநாதர் சிவகாசி விருதுநகர்
ஸ்ரீநிவாசப்பெருமாள் திருவண்ணாமலை விருதுநகர்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பாதூர் விழுப்புரம்
ரிஷபபுரீஸ்வரர் மேல் சேவூர் விழுப்புரம்