Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.

+91- 461 232 1486(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆயிரத்தெண் விநாயகர்

பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆறுமுகமங்கலம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

பாடியவர் – ஆதிசங்கரர் பாடல் பெற்ற தலம்.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது புதுமையான தகவல்.

aayiraththen_vinayakar_koil_aarumukamangalam_koil
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் தயார். அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம்

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம். மோகனூர் போஸ்ட் கீவளூர் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்- 611 109.

+91- 4366 – 279 757, 94427 86870

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிகும்பேசுவரர்

தல விருட்சம்: – அரசு, வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – செண்பகபுரி

ஊர்: – செண்பகபுரம்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியைக் கொடுத்தார். அக்கனியை முருகனுக்குத் தருவதா? விநாயகருக்குத் தருவதா? என அன்னைக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே, உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியைத் தருவதாகக் கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தைச் சுற்றக் கிளம்பினார். விநாயகரோ, பெற்றோரைச் சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். எனவே, சினம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநிக்குச் சென்றார்.

அந்நிகழ்வை எண்ணிய விநாயகர் மனம் வருந்தினார். தனக்கு விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணிக் கலங்கினார். எனவே பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெறப் பெற்றோரிடம் அனுமதி வேண்டினார். அம்மை, அப்பன் இருவரும் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.