Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி

+91-413-2336544(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவ 10 மணி வரை திறந்திருக்கும்.


மூலவர்: – மணக்குள விநாயகர்

தீர்த்தம்: – மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – மணக்குளத்து விநாயகர்

ஊர்: – புதுச்சேரி

மாவட்டம்: – புதுச்சேரி

மாநிலம்: – புதுச்சேரி

தலவரலாறு

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.

 

அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி கோயில், மள்ளியூர்

அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி கோயில், மள்ளியூர், கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 4829 – 243 455, 243 319 , 94471 14345(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்பு

ஊர்: – மள்ளியூர்

மாவட்டம்: – கோட்டயம்

மாநிலம்: – கேரளா

malliyur-entrance_maha_ganapathi_koilபல நூற்றாண்டுகளுக்கு முன், தற்போது கோயிலை நிர்வகித்து வரும் சங்கரன் நம்பூதிரியின் முன்னோர் ஒருவர் கணபதி உருவம் ஒன்றை கொண்டு வந்து இத்தலத்தில் வைத்து பூசை செய்துள்ளார்.பின்னர் ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பங்களும் சேர்ந்து கணபதியை சுற்றி கட்டிடம் கட்டி, பராமரித்து வந்தார்கள்.