Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு

அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு– 673 104, சித்தசமாஜம் போஸ்ட், வடகரா தாலுக்கா, கோழிக்கோடு மாவட்டம் கேரளா மாநிலம்.
*************************************************************************************************

+91 496-252 7444.94472 34320, 94475 40933, 99468 90968 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – லோகாம்பிகா அம்மன்

தீர்த்தம்: – பெரிய குளம், சிறிய குளம்

ஆகமம்/பூசை : – அத்யுத்தமா என்ற முறையில் பூசை செய்யப்படுகிறது.

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – லோகனார்காவு

மாவட்டம்: – கோழிக்கோடு

மாநிலம்: – கேரளா

இங்கு பகவதி,சிவன், திருமாலுக்கென்று மூன்று கோயில்கள் உள்ளன. பகவதியை லோகாம்பிகை, ஆதிபராசக்தி என அழைக்கின்றனர். இவள் சுயம்பு மூர்த்தியாக(தானாகத் தோன்றியவள்) காட்சி தருவது சிறப்பாகும். வடஇந்தியாவில் இருந்து நகரிகர் என்னும் ஆரியர்கள் இடம்பெயர்ந்து கேரளத்திலுள்ள புதுப்பனம் கிராமத்திற்கு வியாபாரத்திற்காக வந்தனர். அவர்களுடன் குலதெய்வமான லோகாம்பிகை உடன் வந்தாள். நகரிகர்களின் கண்ணுக்கு மட்டுமே அவள் தெரிவாள். நகரிகர்களில் ஒருவரை, உள்ளூர்வாசிகள் சிலர் ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்தனர். பழிச் சொல்லைத் தாங்காமல், அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பின், நகரிகர்கள் ஓலம்பலம் என்னும் கிராமத்திற்கு வந்து அதன்பின் லோகனார்காவு கிராமத்திற்குக் கூட்டமாகச் சென்றனர். கூட்டத்தின் பின்னால் தேவியும் பின்தொடர்ந்தாள். அந்த கிராம மக்கள் கண்ணுக்கு லோகாம்பிகா தெய்வம் தெரிந்தது. அவள் யார் என நகரிகர்களிடம் கேட்டனர். நகரிகர்கள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தபோது, அவர்களது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டாள்.

அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி

அருள்மிகு லலித செல்வாம்பிகை(செல்லப்பிராட்டி) அம்மன் கோயில், செஞ்சி
************************************************************************************

+94440 67172 (மாற்றங்களுக்குட்பட்டது)

திறக்கும் நேரம்: காலை 6 – 11 மணி, மாலை 4 – 8.30 மணி.

துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதைத் தரிசிக்க வேண்டுமானால் செஞ்சி செல்லப்பிராட்டி லலித செல்வாம்பிகை அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு.

தல வரலாறு:

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேட்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமபிரான் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிசியசிருங்க முனிவர். இவர் காசியப முனிவரின் மகனான விபாண்டகருக்கு பிறந்தவர். இவரிடம் ஒரு கற்பலகை இருந்தது. அதில் தேவியின் பீசமந்திரங்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த பலகை ரிசியசிருங்கர் மூலம் இங்கு வந்துள்ளது. அதற்கு லலித செல்வாம்பிகை“ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் கற்பலகையை பிரதிட்டை செய்து, கீழே அம்பாள் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிக்கு செல்லும் போது, அவருக்கு இத்தல அம்மன் காட்சி கொடுத்து வழி கூறியதாக கூறப்படுகிறது. ரிசியசிருங்கரின் விக்ரகமும் இங்குள்ளது.

கற்பலகையின் வடிவமைப்பு:

மூலவராக வணங்கப்படும் அம்மன் கற்பலகை வடிவில் இருக்கிறாள்.
ஒரு காலத்தில், கற்பலகைகளில் மந்திரங்களை எழுதிக் கடவுளாக வழிபட்டனர். எனவே, இத்தலம் காலத்தால் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. கற்பலகை, 4 அடி உயரமும், செவ்வக வடிவமும் கொண்டது. பலகையில் 12 சதுரக்கட்டங்கள் உள்ளன. இந்தக் கட்டங்களைச் சுற்றி, உலக நாயகியான ஆதிபராசக்தியின் பீசாட்சர மந்திரத்தின் சூட்சும எழுத்துக்கள் உள்ளன. நடுவில் திரிசூலம் உள்ளது. வலது மேல் பக்கத்தில் சூரியனும், இடது மேல் பக்கத்தில், சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முப்பெரும் தேவியரின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது. ஆயினும், உருவ வழிபாடு கருதி, கற்பலகைக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.