Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி – 624 705, திண்டுக்கல் மாவட்டம்.

*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராஜகாளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தெத்துப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்தார். அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார்.

பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.

அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி

அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை மாவட்டம்.
*********************************************************************************

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புல்வநாயகி
தல விருட்சம் நெய் கொட்டா மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் பாகனேரி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து, தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். சிவன், அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் சினமுற்று அம்பிகையை பூவுலகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்த அம்பிகை அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். அப்போது, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக்கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டியபோது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர்.

கோபுரத்தில் ஆன்மிகத்தை வளர்த்த விவேகானந்தர், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட மகாத்மா காந்திஜி, காதலில் புதிய சரித்திரம் படைத்த ரோமியோ, ஜூலியட், சினிமாவில் காதலை வளர்த்த தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் கீழே கைந்தவக்கால கணபதி சன்னதி உள்ளது. கோபுரத்தின் கீழே, இக்கோயிலின் தேரில் இருந்த சிலைகளைப் பிரதிட்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் பைரவர், முனீசுவரர், சனீசுவரர் உள்ளனர்.