Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர்

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர், அண்ணாமலை புரம், திருச்சி.
***********************************************************************************************

காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூங்காளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தென்னூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமாகத் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள் புரிகின்றாள்.

கோபுர வாயிலைத் தாண்டியதும், மகா மண்டபம் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கின்றார். கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு திகழ்கின்றாள். இவளை தரிசிக்கும்போதே நம்மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அருள்மிகு பொன்னியம்மன் கோவில், கொங்கரப்பட்டு

அருள்மிகு பொன்னியம்மன் கோவில், கொங்கரப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்
**************************************************************************************

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னியம்மன் சமேத பொன்னீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கர்பக்கிரகத்தில் பொன்னியம்மனின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. அத்துடன் அம்மன் வலது காதில் சிறு குழந்தையை அணிகலனாக அணிந்துள்ளார்.

கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை அம்மன் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்ச்சி நடக்கும்.

பல ஆண்டுகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது.