Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்– 643 101, நீலகிரி மாவட்டம்.

+91- 423 – 223 8686, 94430 50414 (மாற்றங்களூக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தந்தி மாரியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்னூர்
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர்.

ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து நோக்கிய போது, சிறுமி ஒருத்தி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார்.

மறுநாள், இத்தகவலை மற்றவர்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில், அவர் அதே காட்சியைக்கண்டு அதிர்ந்து, மறுபடியும் மற்றவர்களிடம் கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய அனைவரும் அன்றிரவில் குதிரை லாயத்தில் தங்கினர்.

காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர். அன்று இரவில், ஒருவரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில், சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாக கூறினாள். அதன்பின், அம்பிகைக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர்.

அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்– 641 018, கோயம்புத்தூர் மாவட்டம்

+91 – 422- 230 0360, 230 4106, 93632 16808 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தண்டுமாரியம்மன் (டென்ட்மாரியம்மன்)
தல விருட்சம் துவட்டிமரம்
தீர்த்தம் சுனை நீர்
ஆகமம் திருமுறை ஆகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் கோவன்புத்தூர்
ஊர் கோயம்புத்தூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளைத் தினமும் வணங்கி வந்தான்.

அப்போது,ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள்.

அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர்.