Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா

அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.

+91-1991-232 125 (மாற்றங்களுக்குட்பட்டது)

இது திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைக்கோயில்(பவன்). சனவரி, பிப்ரவரி மாதம் தவிர, இதர மாதங்களில் செல்லலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணவிதேவியை இலவசமாக தரிசிக்கலாம். அருள்மிகு வைஷ்ணவி தேவியைத் தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

மூலவர் வைஷ்ணவிதேவி,(சிரோ பாலி)
தீர்த்தம் கங்கா நதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கட்ரா
மாவட்டம் கட்ரா
மாநிலம் ஜம்மு & காஷ்மீர்

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால், சிவனின் சொல்லையும் மீறி, பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால், அன்னை கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.

அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது திருமால் சிவனின் கோபத்தை தணிக்க, சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றுதான் ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு.ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு மகளாக வைஷ்ணவி தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில், வைஷ்ணவி தேவியை கவர்ந்து செல்ல எண்ணி, பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளக் குகையில் ஒளிந்து கொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை வதம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வைஷ்ணவி தேவி வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை(பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்று வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பிச் செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டுச் செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணவி தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணவி தேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி மாவட்டம்.

+91-431 267 0860, 267 0460, 98424 02999 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி
உற்சவர் அழகம்மை
தல விருட்சம் மகிழ மரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மாகாளிக்குடி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி, உச்சிமாகாளிஎன்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

ஒருநாள் காளி, “இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லும். அதைவென்று அடிமைப்படுத்தினால், உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்எனக் கூறி மறைந்தாள்.

வேதாளமும் விக்கிரமாதித்தனும்கதை நடந்த தலம் இதுதான் என்கின்றனர்.