Category Archives: ஆலயங்கள்

கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி

அருள்மிகு கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர், காசி நாதர்
அம்மன் பிரசன்னநாயகி
தல விருட்சம் வில்வமரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெடுங்குடி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலைக் குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்குச் சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றைச் செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.

கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி

அருள்மிகு கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி, தஞ்சாவூர் மாவட்டம் .

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் துர்க்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி
தீர்த்தம் பாப விமோசன தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவி தபோவனம்
ஊர் அம்மன்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தைத் தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது சூலத்தில் படிந்திருந்த இரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு பாப விமோசன தீர்த்தம்என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.