Category Archives: பாடல் பெறாதவை

விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் .

+91- 44 – 2432 1793

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை கைப்பற்றிய அவர்கள், இந்திரலோகத்தையும் கைப்பற்றி அங்கும் ஆட்சியமைத்தார்கள். தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்து சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி, மூங்கிலாக வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டு வந்தான். இந்திர லோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் வழிபட்டனர். இரவில் யார்கண்ணிலும் படாதபடி கைவிடேலப்பரின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவன், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார். இந்திரன், இந்திராணியை கைவிடேலப்பரிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். ஆனால் கைவிடேலப்பரோ, தனது காவல் கணக்குகளை சிவனிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வரும்முன் இந்திராணியை, தனது தளபதியிடம் ஒப்படைத்தார். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை அஜமுகி அழகே உருவான இந்திராணியை, தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளைக் கவர்ந்து செல்ல முயன்றாள். மகாகாளனோ அஜமுகியிடம் சண்டையிட்டு அவளது கரத்தை வீழ்த்தி இந்திராணியை மீட்டார். அந்த அரக்கியின் கை விழுந்த காடு தான் கைவிழுந்த சேரி.” அது தற்பொழுது,”கைவிலாஞ்சேரிஎன அழைக்கப்படுகிறது. சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய சீர்காழி தென்பாதியில் சாஸ்தாவின் கோயில் உள்ளது.

விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை)

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை), திண்டுக்கல் மாவட்டம்.

+91 4543 227 572, 97865 61935

காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் உத்தரவாகினி
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குன்று அரண் கோட்டை
ஊர் கண்ணாபட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின், தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை அனுப்பி, ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். “நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார். அப்போதுதான்,”அங்கு சிவாலயம் எதுவுமில்லைஎன்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார். இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு விஸ்வநாதர்என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.