Category Archives: பாடல் பெறாதவை

அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080.

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமரபணீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்திரநாயகி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் கிணற்று நீர்
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பழம்பெரும்பதி
ஊர் பாரியூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் இலிங்கத்தை பிரதிட்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், “அமரபணீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார்.

அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு, பொள்ளாச்சி அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 290 932, 98437 17101

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமணீஸ்வரர்
அம்மன் பார்வதி, கங்கா
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் கங்கா தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தேவம்பாடி வலசு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மூதாதையர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதற்காக பகீரதன் சிவனை வேண்டி, கங்காதேவியை ஆகாயத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தான். அவள் பெரும் ஆற்றலுடன் பூமியை நோக்கி வந்ததால் சிவன் அவளை தனது தலையில் தாங்கி, வேகத்தைக் குறைத்தார். பின், ஜடாமுடியை சாய்த்து பூமியில் பாயவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்திய சிவனின் தலையிலேயே கங்காதேவி குடி கொண்டாள். இதனால் இவளை சிவனது மனைவி என்றும் சொல்வர். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் சிவனுடன் பார்வதி, கங்காதேவி ஆகிய இருவரும் அருளுகின்றனர்.