Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு

அருள்மிகு அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு விருதுநகர் மாவட்டம்.

+91-94437 74299

காலை 6 முதல் 12 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காள ஈஸ்வரி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மாந்தோப்பு

மாவட்டம்: – விருதுநகர்

மாநிலம்: – தமிழ்நாடு

கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈசுவரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். இவளை பார்த்தால் பெற்ற தாயை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு புள்ளி மான்கள் விளையாடித் திரிந்ததால் மான்தோப்புஎன அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.

இத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம் – 641 606 திருப்பூர் மாவட்டம்.

+91- 421-220 3926, 224 0412.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:அங்காளம்மன்

தல விருட்சம்: வேம்பு

பழமை:500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:முத்தனம் பாளையம்

மாவட்டம்: திருப்பூர்

மாநிலம்: தமிழ்நாடு

சுமார் 800 வருடங்களுக்கு முன் இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்குத் தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும். இதனால் அது ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் பசுவானது சுயம்புவுக்குத் தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார்.