Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்)

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்)- 602025, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 94436 39825.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:       – அங்காளபரமேஸ்வரி,

                – விநாயகர், தாண்டவராயன்

அம்மன்:       – பூங்காவனத்தம்மன்

தல விருட்சம்:  – வேப்பமரம்

பழமை:        – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:           – ராமாபுரம் (புட்லூர்)

மாவட்டம்:     – திருவள்ளூர்

மாநிலம்:       – தமிழ்நாடு

பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாகத் தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.

மகிசுரன் அசுர குணம் கொண்டவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,”நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும். இல்லையெனில் தொலைத்து விடுவேன்,” என எச்சரித்துச் சென்றான். பூங்காவனம் என்பது தீய சக்திகள் உலவும் இடம். தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம் எனத் தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் பூங்காவனத்தை அடைந்தான். அங்கு தன் விருப்ப தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டி தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204. விழுப்புரம் மாவட்டம்.

+91 – 4145 – 234 291

காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காளபரமேஸ்வரி

தல விருட்சம்: – வில்வம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மேல்மலையனூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார்.