Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94865 68160 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மன்
அம்மன் சரஸ்வதி, காயத்ரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது; சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தை பார்த்து பயந்த பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”உனது கர்வத்தை அடக்குவதற்காகவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் மறந்து போகும்என்று சாபமிட்டார். வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும்என்றார். பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணம் வந்து தவம் செய்தார். யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சேவை செய்தனர். அப்போது யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை மீண்டும் சொல்லித்தந்து வேத நாராயணன்என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லிஎனப்பட்டாள். யாகம் முடிந்தவுடன் இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம்செய்வதற்காக விஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ஒரு நதியை உருவாக்கினார். இந்த நதி ஹரி சொல்லாறுஎன்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி அரசலாறு எனப்பட்டது.

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ்

அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில், செமினரி ஹில்ஸ், நாக்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் முருகப்பெருமான், வெங்கடேசப் பெருமாள்
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செமினரி ஹில்ஸ்
மாவட்டம் நாக்பூர்
மாநிலம் மகாராஷ்டிரா

நாக்பூரில் மோதிபாக் ரயில்வே காலனி இருக்கிறது. காலனியின் மைதானத்தில் ஒரு வேல் நடப்பட்டு பூஜை நடந்து வந்தது. அப்பகுதியிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து சிறிய கோயில் ஒன்றை அந்த இடத்தில் உருவாக்கினர். இடப்பிரச்னை காரணமாக அங்கிருந்த கோயில் செமினரி ஹில்ஸ் என்ற மேடான இடத்தில் கட்டப்பட்டது. அந்த பகுதி சேட்கள் ஒன்றிணைந்து இந்த கோயிலை எழுப்பினர். தமிழகத்திலிருந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சிலை, நவக்கிரகங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பின்னர் சேட்களின் கோரிக்கையின் பேரில் கோயிலை இரண்டு தளங்களாக அமைக்க முடிவு செய்தனர். கீழே பாலாஜியும், மேல் தளத்தில் முருகப் பெருமானையும் ஸ்தாபனம் செய்ய முடிவெடுத்தனர்.