Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சாஸ்தாநகர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சாஸ்தாநகர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

ஐயப்பக்தர்கள் ஐயப்பனுக்கு சேலத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை துவக்கினர். ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் தோன்றிய விதமே சுவாரஸ்யம் தான்.

சேலத்தில் எந்த இடத்தில் கோயில் கட்டலாம் என்று குரங்கு சாவடி சென்றாய பெருமாள் கோயிலில் நிர்வாகிகளிடம் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை செய்தபோது, திடீரென ஒரு ஒளி தோன்றி கோயில் அமைக்கும் இடத்தை காண்பித்ததாம். அதன் பிறகு அந்த இடத்தை வாங்கி, அங்கு கோயில் நிர்மாணிக்கும் வேலைகளைத் துவக்கினர்.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4567- 222 155, 224 140, +91- 94432 35170

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சபரிமலையைப் போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளுகிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும்.

சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி இறைவன் ஒருவனேஎன்ற தத்துவத்தையும், “மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்குஎன்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, “இறைவனான இவரை வணங்குஎனக் காட்டுகிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.