Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 98949 06455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
உற்சவர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் வீரகங்கை
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவராததானி
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க, சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது. இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.

வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும்.

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம், சேலம் மாவட்டம்.

+91- 427 – 2218 543, 99409 90984 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஸ்ரீசைலம்
ஊர் சேலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவத்தல யாத்திரை சென்ற அகத்தியர், இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊத்துமலையில் சிலகாலம் தங்கினார். அங்கு அவர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவ தரிசனம் வேண்டி பூஜை செய்தார். சிவன் காட்சி தந்தபோது அகத்தியர் அவரிடம், தனக்கு வீரபத்திரர் வடிவில் காட்சி தரும்படி வேண்டினார். சிவனும், வீரபத்திரராக காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு வீரபத்திரருக்கு கோயில் கட்டப்பட்டது.

மூலஸ்தானத்தில் வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் இருக்கின்றனர். காளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் வீரபத்திரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. சுகவன முனிவர், இவரைத் தரிசனம் செய்துள்ளார். வீரபத்திரர், சிவனின் அம்சம் என்பதால் சிவலிங்கம் ஒன்றை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், “ஜங்கமேஸ்வரர்என்றழைக் கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்துப் பூஜை செய்கின்றனர்.