Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி கோயில், பழங்காநத்தம்

அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி கோயில், வசந்த நகர் பஸ் ஸ்டாப் அருகில், பழங்காநத்தம், மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452- 4376 395, 94430 55395

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்னி வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பழங்காநத்தம், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டிய மன்னனுக்கு குழந்தையில்லை. அவனது மனைவி காஞ்சனமாலை பார்வதியின் பக்தை ஆவாள். அவளுக்கு அருள் செய்வதற்காக மீனாட்சி என்ற பெயரில் அம்பிகை அவர்கள் இல்லத்தில் அவதரித்தாள். உலகையே வென்ற மீனாட்சி, கைலாயத்தில் சிவனைக் கண்டாள். தனது மணாளன் அவரே என உணர்ந்தாள். அவளை மணந்து கொள்வதற்காக சிவன், கைலாயத்திலிருந்து மதுரை வந்தார். அனைத்து தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் மதுரைக்கு வந்து விட்டனர். தனது திருமணத்திற்கு பாதுகாப்பாக முனீஸ்வரர், ஜடாமுனி போன்ற காவல் தெய்வங்களை சிவபெருமான் திசைக்கு ஒருவராக நிறுத்தி வைத்தார். தென்திசைக்கு தனது அம்சமான வீரபத்திரரை நிறுத்தினார். பிற்காலத்தில் கர்நாடகாவில் வசித்த வீரபத்திரர் பக்தர்கள் சிலர், மதுரை வந்தனர். அவர்கள், இவ்விடத்தில் அக்னி வீரபத்திரர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி

அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி, சேலம் மாவட்டம்.

+91 98650 75344 (மாற்றங்களுக்குட்பட்டது)

24 மணிநேரமும் திறந்திருக்கும்.

மூலவர் முனியப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வெண்ணங்கொடி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார். நீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.