Tag Archives: சேலம்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம்.
*****************************************************************************

+91 427 2267 845 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோட்டை மாரியம்மன்

தல விருட்சம்: – அரச மரம்

தீர்த்தம்: – மணிமுத்தாறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சேலம்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் . அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது. எவ்வளவு பெரிய பதவி உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.

நைவேத்தியம்படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பு.

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜகணபதி

பழமை: – 400 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – சைலதேசம்

ஊர்: – சேலம்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

400 ஆண்டுகளுக்கு முன் சேலம் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டது. கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் சைலதேசம்என பெயர் பெற்றது.

சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் கணபதியை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரசுவதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராச்சியத்தைப் பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தியது. சுகவனேஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.

இவர் தினமும் அரச அலங்காரத்தில் காட்சி தருவதால் ராஜ கணபதிஎன அழைக்கப்படுகிறார்.