Tag Archives: காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்-631 501.

+91 44 2722 2609

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிகாமாட்சி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – காஞ்சிபுரம்

மாவட்டம்: – காஞ்சிபுரம்

மாநிலம்: – தமிழ்நாடு

அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். தேவர்கள் தங்களைக் காக்கும்படி பூவுலகுக்கு வந்து அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை அழித்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சியிலேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த திருச்(ஸ்ரீ)சக்ரம் நிறுவனம் செய்யப்பட்டது. இவள் ஆதிகாமாட்சிஎன்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் காளி கோட்டம்என்றும் பெயருண்டு.