Monthly Archives: March 2012

இழந்த பதவி கிடைக்க

இழந்த பதவி கிடைக்க

எதனால் இருந்த பதவியை இழந்தோம் என ஆராயுங்கள். அந்தத் தவறை இனி செய்வதில்லை என சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் அந்தப் பதவிக்குச் செல்வது நல்லதா? என எண்ணிப்பாருங்கள். நல்லதுதான் எனில் அப்பதவி தருபவரைக் காக்காய் பிடியுங்கள். சட்டத்திற்குப் புறம்பாய் என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் செய்யுங்கள்.

ஒன்றும் பலனிக்கவில்லையெனில் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று பரிகாரங்கள் செய்யுங்கள்.

எமனேஸ்வரமுடையார் எமனேஸ்வரம் பரமக்குடி இராமநாதபுரம்
தண்டீஸ்வரர் வேளச்சேரி சென்னை

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

வாஞ்சிநாதசுவாமி ஸ்ரீ வாஞ்சியம் திருவாரூர்
ஆரண்யேஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்
ஐராவதேஸ்வரர் மேலத்திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
அரசலீஸ்வரர் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்

அப்படியும் பதவி கிட்டவில்லையெனில் என்னைக் குறை கூறாமல் வேறு பதவி தேடுங்கள்.

இடப்பிரச்னைகள் நீங்க

இடப்பிரச்னைகள் நீங்க

பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.

விட்டுக்கொடுத்துப் போங்கள்.

கோர்ட்டுக்குப் போகாதீர்கள்; சொத்தை அழித்து விடாதீர்கள்.

ஒன்றுக்கும் மசியவில்லையெனில் இருக்கவே இருக்கிறார் இறைவன்.

கீழ்கண்ட ஆலயங்களில் முறையிட்டால் இடப்பிரச்சனைகள் தீருமென்கின்றனர் பக்தர்கள்.

அஷ்டபுஜப்பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
ஆதிவராகப் பெருமாள் கும்பகோணம் தஞ்சாவூர்

ஆதிவராகப்பெருமாள்

கல்லிடைக்குறிச்சி

திருநெல்வேலி

வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி திருவாரூர்
அக்னி வீரபத்திரசுவாமி பழங்காநத்தம், மதுரை மதுரை
நீர் காத்த ஐய்யனார் இராஜபாளையம் விருதுநகர்
வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர் விழுப்புரம்