Monthly Archives: January 2012

அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை

அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367-294 640 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வண்டுறைநாதர், பிரமரேசுவரர்
அம்மன் வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள்
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் பிரம்மபுரீச தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவெண்டுறை, வண்டுதுறை
ஊர் திருவண்டுதுறை
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்கச் செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் முனிவர் சிவனைத் தொடர்ந்து வழிபாடு செய்தார். சிவன் முனிவருக்கு அருள்புரிந்தார். இதனால் பார்வதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகம் பெற்றார். சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும்படி சாபமிட்டார். மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார். மனமிறங்கிய பார்வதி, “சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை. திருவண்டுதுறைத் தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெறுகஎன அருள்புரிந்தார். பிருங்கிமுனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் திருவண்டுதுறைஆனது. இப்போதும் கூட சிவன் சன்னதியில் வண்டின் ஒலி கேட்கிறது என்கிறார்கள்.

திருமால் இத்தல சிவனை பூஜித்து, சிவபூஜையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டினார். பிரம்மா தன் படைப்புத்தொழிலில் தடை ஏற்பட்ட போது, இங்கு வழிபாடு செய்து தடை நீங்க பெற்றார். துருவ மன்னன், அங்கவன், அரிச்சந்திரன், முசுகுந்த சோழனின் மகன் தியாகசோழன் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 279 781, 97861 51763 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கொழுந்தீஸ்வரர் (அக்ர பரமேஸ்வரர்)
அம்மன் தேனார் மொழியம்மை (தேனாம்பிகை என்ற மதுர பாஷிணி)
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் முள்ளியாறு, சிவகங்கை, பிரம, சிவ, மண்டை, அமுத, இந்திர, விசுவகன்ம, அரம்பா என 9 வகை தீர்த்தங்கள்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இந்திரபுரம், மேலக்கோட்டூர் கோயில், திருக்கோட்டூர்
ஊர் கோட்டூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, “இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று, அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும். அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதாக விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக, தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து, பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள். இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டதுஎன்றார்.