Monthly Archives: December 2011

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 260 151 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாயாவனேஸ்வரர்
அம்மன் குயிலினும் இனி மொழியம்மை (கோஷாம்பாள்)
தல விருட்சம் கோரை
தீர்த்தம் ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சாய்க்காடு, மேலையூர்
ஊர் சாயாவனம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் அப்பர், ஞானசம்பந்தர்

மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.

தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். “சாய்என்றால் கோரை என்று பொருள் . பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் சாய்க்காடுஎனப்பட்டது .

இந்திரன் தாயார் தினமும் இந்திர லோகத்திலிருந்து இங்கு வந்து ஈசனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . பூஜை வேளையில் தாயைக்காணாது இந்திரன் ஒருநாள் தொடர்ந்து வந்து பார்க்கையில், அவர் இத்தலத்திற்கு வருவது கண்டான் . தாய்க்காக இத்தலத்தையே அவன் பெயர்த்தெடுக்க முயன்று தனது தேரில் பூட்டியபோது, ஈஸன் தன் கால்விரலால் சற்றே பூமியில் அழுத்த இந்திரன் தேர் எழும்பாதது கண்டான். தன் தவறை உணர்ந்து இத்தலத்து ஈசனிடம் பிழை பொறுத்தறுளுமாரு வேண்டினான் . ஈசனும் அவனை பொறுத்து அருள் வழங்கினார் என்பது தல வரலாறு.

இயற்பகை நாயனார் பிறந்தது இத்தலத்தில்தான்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை, தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 93605 77673, 97879 29799 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
அம்மன் அழகம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சந்திர தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கலிக்காமூர்
ஊர் அன்னப்பன்பேட்டை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார். அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், “சுந்தரேஸ்வரர்என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு வில்வவன நாதர்என்றும் பெயருண்டு.

சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. “இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.