Monthly Archives: November 2011

கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம்

+91- 99420 62825, 98422 63681

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சவுந்தர நாயகி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராஜபதி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியைக் வேண்ட, அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஜீவ நதியான தாமிரபரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார். அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களாவன:

கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.

+91- 4287 – 223 252,+91- 94435 15036, +91-99943 79727

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அறம்வளர்த்தநாயகி
தல விருட்சம் வில்வம், நெல்லி
தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜபுரம்
ஊர் ராசிபுரம்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான இம்மன்னன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை. களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வெண்பன்றியைக் கண்டான். உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து ஓடியது. மன்னன் பின்தொடர்ந்தான்.