Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்

அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-235 225 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உத்தவேதீஸ்வரர்
அம்மன் அரும்பன்ன வனமுலைநாயகி
தல விருட்சம் உத்தாலமரம்
தீர்த்தம் பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
ஆகமம் காரண, காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்துருத்தி, குற்றாலம்
ஊர் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார். இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக்குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு இலிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல்,”இறைவனே! என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும்படி, அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்என்று கூற ஈசனும் சென்று விட்டார்.


சில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மணநாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக இரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, “உத்தாலம்என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் குத்தாலம்எனப்பட்டது. சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) திருக்கோயில், திருவாவடுதுறை

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) திருக்கோயில், திருவாவடுதுறை, திருவாவடுதுறை ஆதீனம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 232 055 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோமுக்தீஸ்வரர்
அம்மன் ஒப்பிலாமுலைநாயகி
தல விருட்சம் படர்அரசு
தீர்த்தம் கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நந்திநகர், நவகோடிசித்தர்புரம்
ஊர் திருவாவடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோவாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.