Category Archives: தேனி

அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி

அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி – 625602. தேனி மாவட்டம்.

+91-4556- 235 511 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கோயில் திறந்திருக்கும்.

மூலவர்: – மூங்கிலணைக் காமாட்சி

தல விருட்சம்: – மூங்கில் மரம்

தீர்த்தம்: – மஞ்சள் ஆறு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – தெய்வனாம்பதி

ஊர்: – தேவதானப்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

மூங்கிலணைக் காமாட்சியைப் போற்றி வையாபுரி புலவர் காமாட்சிபதிகம்என்னும் நூல் இயற்றியுள்ளார்.

இப்பகுதியில் கொடுங்கோலாட்சி புரிந்த வச்சிரதத்தன் என்னும் அசுரனை கொல்வதற்கு துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடினாள். பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள். எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் நிலக்கிழார் பூசை செய்து வழிபட்டார். அம்மன் அசரீரியாக, ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதுபடியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்னக் குச்சு ஒன்று கட்டி வழிபட்டனர். மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைந்து நின்றதால் மூங்கிலணைக் காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி

அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி – 625 534 தேனி மாவட்டம்.
*******************************************************************************************
+91-4546-246242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கவுமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – வீரபாண்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான்.

அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தைப் பூசித்து தவம் இருந்தாள்.

அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்திச் செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, அரக்கன் இரு துண்டுகளாகப் பிளந்து இறந்தான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியைக் கன்னித்தெய்வமாக்கி கவுமாரிஎனத் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.

கவுமாரியின் கருணை:

அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,”வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்என்று கூறி மறைந்தார்.