Category Archives: தேனி

அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம்

அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், சாமாண்டிபுரம் – 625 516, கம்பம், தேனி மாவட்டம்.

+91- 99441 16258, 97893 42921 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 – மதியம் 1.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாமாண்டியம்மன்
தல விருட்சம் மஞ்சள் அரளி, செவ்வரளி
தீர்த்தம் சுரபி தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் கம்பம் சாமாண்டிபுரம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

முன்னொருகாலத்தில் வளையல்காரர் ஒருவர், இவ்வழியாக வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்து ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே நீண்டது. வளையல்காரரோ அதிர்ந்து விட்டார். அப்போது,”ஐயா. என் கையில் வளையல் போடுங்கள்என்று ஒரு அசரீரி ஒலித்தது. பயந்த வளையல்காரர் இங்கிருந்து ஓடிவிட்டார்.

அவர் இவ்வழியாக திரும்பி வரும்போதும், அதேபோலவே கை நீண்டு தனக்கு வளையல் அணிவிக்கும்படி கேட்டது. வளையல்காரரும் பயத்திலேயே கையில் அணிவித்தார். பின் ஊருக்குள் வந்த வளையல்காரர் நடந்ததைக் கூறவே, மக்கள் இங்கு வந்தனர். அப்போது ஒரு பக்தர் வாயிலாக தோன்றிய சாமுண்டீசுவரி, தானே புற்றில் குடியிருப்பதாகக் கூறினாள். எனவே, மக்கள் இங்கு சாமுண்டீசுவரிக்கு கோயில் கட்டினர்.

இத்தலத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் வளையல் பிரசாதமாகத் தரப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், கருப்பசாமி, ராக்காச்சி ஆகியோர் இருக்கின்றனர்.

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி-625 531 தேனி.
***************************************************************************************

+91- 97889 31246, 96779 91616 (மாற்றங்களுக்குட்பட்டவை)

செவ்வாய், வெள்ளியில் காலை 5- 9 மணி, மாலை 5.30- இரவு 9 மணி. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு 1 மணி வரை.

மூலவர்: – நாககாளியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – முத்துதேவன்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

திருமண பாக்கியத்தை வழங்கும் நாக காளியம்மன் முத்துதேவன்பட்டியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு மாதம் ஒருமுறை, பிரபல கோயில்களில் அம்பாள் அலங்காரம் செய்யப்படுவதும், அதை மாதம் முழுவதும் கலைக்காமல் வைத்திருப்பதும் விசேடம்.

முற்காலத்தில் இப்பகுதியில் சங்குப்பூ செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்கு ஒரு புற்று இருந்தது. அவ்வூர் சிவபக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை,”தான் புற்றுக்குள் இருப்பதாக உணர்த்தினாள்.” அதன்படி புற்றைப் பார்த்த போது, அதற்குள் அம்பாளின் சுயம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். பின், அம்பிகைக்கு சிலை வடித்து, புற்றுக்கு மேலேயே பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புற்றில் தானாகத் தோன்றியதால் அம்பிகைக்கு சுயம்பு நாககாளியம்மன்என்று பெயர் சூட்டப்பட்டது.