Category Archives: தூத்துக்குடி

கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம்

+91- 99420 62825, 98422 63681

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சவுந்தர நாயகி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராஜபதி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியைக் வேண்ட, அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஜீவ நதியான தாமிரபரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார். அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களாவன:

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை)

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை) – 628 601, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஜயாஸனர்(பரமபத நாதன்)
உற்சவர் எம்மடர் கடிவான்
தாயார் வரகுண வல்லி, வரகுணமங்க‌ை
தீர்த்தம் அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நத்தம்(வரகுணமங்கை)
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.