Category Archives: சிவகங்கை

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91 – 4577 – 264227, 97905 83820

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்

சண்முகநாதர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

அரசமரம்

தீர்த்தம்

தேனாறு

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

அரசவனம்

ஊர்

குன்றக்குடி

மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சூரனாதியோர் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை, நாங்கள்தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாகப் பொய் சொன்னதால், மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போகச் சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கித் தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாகத் தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து, சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலைஎன்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டர். மலை மீதுள்ள இராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டர். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம்

அருள்மிகு பூவணநாதர்(புஷ்பவனேஸ்வரர்) திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்.

+91 4575 265 082, 265 084, 94435 01761 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவணநாதர், புஷ்பவனேஸ்வரர்
அம்மன் சௌந்தரநாயகி, மின்னனையாள்
தல விருட்சம் பலா
தீர்த்தம் வைகை, மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பூவணம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்கத் தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் எனக் கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னைக் கொண்டு பூவணநாதரை உருவாக்கினாள். அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.