Category Archives: கடலூர்

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்-விருத்தாசலம்

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

+91- 4143-230 232, 93621 51949 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் கொளஞ்சியப்பர்
தல விருட்சம் கொளஞ்சிமரம்
தீர்த்தம் மணிமுத்தாறு
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மணவாளநல்லூர்விருத்தாசலம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். “விருத்தம்என்றால் பழமைஎன்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம். அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்

அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்.

+91-4142- 236 728

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான்)
அம்மன் பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரகந்நாயகி)
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்),சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
ஊர் திருப்பாதிரிபுலியூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களைப் பிராட்டி தன் திருக்கரங்களால் பொத்தினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன், இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ, அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு, மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

பள்ளியறை: இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால், அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள். ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.