Category Archives: கடலூர்

வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்.

+91-4142-224 328 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்
அம்மன் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சுவேத, கெடில நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாணிக்குழி
ஊர் திருமாணிக்குழி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக மகாவிஷ்ணு, வாமன அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,”இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள்என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும், அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்தப் பழியைப்போக்க திருமால், இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமாணிக்குழிஎன பெயர் ஏற்பட்டது.

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனிப் பள்ளியறையும் கிடையாது.

சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர்

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்தளூர், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.

+91- 4142 – 248 498, 94448 07393

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சிவலோகநாயகி (பூங்கோதை)
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சூர்யபுஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தளூர்
ஊர் திருத்துறையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர்

கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் இலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி இலிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.


இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.